Saturday 24 December 2016

Wild Tales - கடவுள் பாதி மிருகம் பாதி


Hollywood ல் 3 Act structure என்று திரைக்கதைகான ஒரு இலக்கணம் வைத்திருக்கின்றனர். பெரும்பாலும் இதை அடியொற்றியே திரைக்கதை எழுதப்பட்டு அது படமாகும்.

Richard Linklater, Coen Brothers, Paul Thomas Anderson போன்ற இயக்குனர்கள் விதிவிலக்கு. வணிக வெற்றி தாண்டி யோசிக்கும் போது புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை பெரிய வெற்றி அடைவதும் உண்டு.

திரைக்கதை எழுதுவதிலும் புதிய புதிய முயற்சிகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் Pulp Fiction ஒரு trend setterபடம். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள், அவைக்கு பொதுவான ஒரு சரடு என்று non linear பாணி கதை. அதாவது 1,2,3 என்று வரிசையாக கதை நகராமல் 4,2,1,3,7,5  என்று நகரும். சீட்டு கட்டை கலைத்து போட்டு விளையாடுகிறோம். ஆனாலும் நமக்கு விளையாட்டு புரிகிறது தானே, அதே போல் இந்த non linear பாணியும். பார்த்து முடிக்கும் போது ஒரு அனுபவமாக மாறி விடும். எது மாதிரியும் இல்லாத ஒரு அசலான படம் என்று உணர்வோம்.

இப்படி non linear பாணியில், Magnolia, Memento, Amores Perros, Babel போன்றவை உலக புகழ் பெற்ற ஆக்கங்கள்.

இங்கே நாம் பார்க்க போகும் Wild Tales திரைப்படம் இதிலிருந்து ஒரு படி மேலே என்று கூறத்தக்க படம். படத்தில் மொத்தம் 6 குறும்படங்கள் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் ஒரு பொதுவான மையம் உள்ளது ஆனால் ஒரு கதையில் வரும் கதா பாத்திரங்கள் வேறு எந்த கதையிலும் வர மாட்டார்கள்.  இது linear பாணி கதை என்பது கூடுதல் சிறப்பு.

ஒன்று: Pasternak
ஒரு நவீன உடை அணிந்த பெண் விமானத்திற்கான பயணச்சீட்டு  வாங்கிக்கொண்டு அது தன்னுடைய பயணம் செய்த தூரக் கணக்கில் சேருமா என்று விசாரித்து விட்டு விமானத்தில் சென்று ஏறுகிறாள். அருகில் இருந்த நபருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தன்னுடைய முன்னாள் காதலன் Gabriel Pasternak குறித்து அவருக்கு தெரியும் என்பதை கேட்டு ஆச்சரிய ப்படுகிறாள். அந்த விமானத்தில் பயணம் செய்யும் மேலும் இருவர் தங்களுக்கும் Pasternak அறிமுகம் தான் என்று சொல்கிறார்கள். மீதியை திரையில் பாருங்கள்.

இரண்டு: The Rats

மழை பெய்யும் ஒரு இரவில் வாடிக்கையாளர் யாரும் இல்லாத உணவு விடுதிக்கு ஒருவர் வருகிறார். பணிப்பெண் ஓடி வந்து வரவேற்கிறாள். என்ன வேணும் என்று விசாரிக்கிறாள். Order எடுத்து கொண்டு உள்ளே செல்கிறாள். ஆனால் இதற்குள் கடைக்கு வந்திருக்கும் அந்த நபர் தனது தந்தை தற்கொலை செய்து கொள்ள காரணமானவர் என்றும் தனது தாயை மான பங்க முயற்சி செய்தவர் என்றும், இவருக்கு பயந்தே இடம் பெயர்ந்து இங்கு வந்ததாகவும் சமையலை கவனிக்கும் நடுத்தர வயது பெண்ணிடம் கூறுகிறாள். வந்தவர் அரசியல் புள்ளி என்றும் கூறுகிறாள். நடுத்தர வயது பெண் அவருக்கு சமைத்து கொண்டே அதில் எலி விசத்தை கலந்து விடவா என்று கேட்கிறாள். அடுத்தவர்களை சுரண்டி வாழும் ஆட்கள் உலகுக்கு தேவை இல்லை என்று தர்க்கத்தை அடுக்குகிறாள்.

மூன்று: Road to Hell

நீங்கள் Speilberg இயக்கிய Duel படம் பார்த்திருக்கிறீர்களா?! அதனுடைய 20 நிமிட பிரதி தான் இந்த மூன்றாவது கதை. Audi Car, Suit, Boot என்று பணக்கார ஆள் ஒருவர் சாலையில் தனக்கு வழிவிட தாமதம் ஆக்கிய நபரை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு விரைந்து செல்கிறார். வண்டி puncture ஆகி விடுகிறது. வசவுகளை வாங்கிய நபர் அங்கு வந்து சேர்கிறார். அதன் பின் நடப்பவை ரணகளம், அதகளம்.

நான்கு: Bombita

இது வரை மனிதனுக்கும் மனிதனுக்குமான முரண் பாடு, பகை, வன்மம், குரோதம், பழிவாங்கும் உணர்ச்சி என்று பேசிய கதைகள் இங்கே ஒரு தனி மனிதனுக்கும் அமைப்புக்கும் ஏற்படும் முரண்பாட்டை முன்வைக்கிறது. ஒரு வகையில் இந்தியன், அந்நியன், எவனோ ஒருவன் பாணி என்று எளிமை படுத்தி சொல்லலாம்.

இதன் நாயகன் பழைய கட்டிடங்களை வெடி வைத்து தகர்க்கும் நிபுணன். அவர் எதையும் ஒரு கச்சித தன்மையோடு செய்பவர். அன்று பிறந்த நாள் கொண்டாடும் மகளுக்கு cake வாங்க கடைக்கு செல்கிறார். திரும்பி வரும்போது தன்னுடைய car, towing vehicle மூலம் அகற்ற பட்டிருப்பது கண்டு சினம் கொள்கிறார். அபராதம் கட்ட வேண்டிய இடத்தில் விளக்கம் கோருகிறார். மரியாதையாக நடத்த வேண்டுகிறார். எல்லாம் முடிந்து பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு தாமதமாக செல்கிறார். இது மனைவியுடன் ஒரு கசப்புணர்வான ஒரு உரையாடலுக்கு இட்டு செல்கிறது. மறுநாள் அபராதம் கட்ட போகும் போது மேலும் விளக்கம் கேட்டு தன்னுடைய boiling point யை அடைந்து விடுகிறார். எதிர்வினையாற்றுகிறார்.

ஐந்து: The Deal

முன்பாகம் சேதமடைந்த ஒரு BMW கார். நகரின் பணக்காரர் ஒருவரின் மகனுடையது. ஒரு கர்ப்பிணி பெண்ணை இடித்து விட்டு நிறுத்தாமல் வந்து விட்டான். ஆயிரம் இருந்தாலும் மகன் இல்லையா?!! அவனது அப்பா மகனை காப்பாற்ற தனது வக்கீலை அழைக்கிறார். பேரங்கள் ஆரம்பிக்கின்றன. 15 வருடமாக தன்னிடம் வேலை பார்க்கும் தோட்டக்காரரை பழியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கிறார். எரிகிற வீட்டில் பிடிங்கின வரை லாபம் என்று பல கணக்குகள் முளைக்கின்றன.

ஆறு: Till Death Us Do Part

மிக கலகலப்பாக ஆரம்பிக்கும் இந்த பகுதி புதிதாக திருமணம் ஆன தம்பதியின் விருந்து நிகழ்ச்சி கொண்டாட்டங்களை காட்டுகிறது. விருந்திற்கு வந்திருக்கும் ஒரு பெண்ணுடன் தன்னுடைய கணவருக்கு தொடர்பு இருக்கிறது என்று மனைவி கண்டுபிடிக்கிறாள். ஒரு பெண்ணின் சமநிலை குலையும் போது...

நாம் நாகரீகம் கருதி பல சமயங்களில் பல விசயங்களில் விட்டு கொடுத்து விடுகிறோம். சில சமயம் எதிர்கால நலன் கருதி யாரையும் பகைக்க கூடாது என்று தெளிவாக ஒரு கோட்பாட்டை உருவாக்கி செயல்படுகிறோம். பொய்யாக கோபப்படுவது ஒரு கலை. அதை சிறப்பாக செய்பவர்கள் நம்மூரில் ஆட்சியாளர்களாக இருப்பார்கள். ஆறுவது சினம் என்பது அவ்வை. ரௌத்திரம் பழகு என்பது பாரதியார் வாக்கு. எங்கே நம் சினம் செல்லுபடி ஆகுமோ அங்கே தான் காட்ட முடியும். வேண்டும். இது வள்ளுவர்.

இந்த 21ம் நூற்றாண்டு மனித உரிமைகளை முன்னிறுத்தும் நூற்றாண்டு என்றாலும் நமக்குள் இருக்கும் மிருகம் விழித்துக்கொள்ள ஒரு சிறு பொறி போதுமானதாக இருக்கிறது.

70 வருடம் வாழ்ந்த மனிதனிடம் அவருடைய வாழ்க்கையை பத்தி கேட்டால் அவர் ஒரு மணி நேரத்தில் சொல்லி விடுவார் என்று ஓஷோ சொல்வாராம். வெவ்வெறு மனிதர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் உச்சகட்ட கோபம், பயம், சினம், எரிச்சல், பழி வாங்கும் உணர்ச்சி, துரோகம் என்று எதிர்மறை குணங்களை வெளிப்படுத்தம் நிமிடங்கள் இங்கே ஆறு கதைகளில் விரிகின்றன.

இந்த கதைகளில் அங்கதத்திற்கும் குறைவில்லை. Ensemble Cast என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். Argentina நாட்டு திரைப்படமான இதில் Ricardo Darin போன்ற புகழ் பெற்ற நடிகர்களும் இருக்கிறார்கள். அனைத்து கதையிலும் அனைத்து நடிகர்களும் சிறப்பான ஒரு வெளிப்பாட்டை நிகழ்த்துகின்றனர்.  எழுத்தாளர்கள் சிறுகதை தொகுப்பு வெளியிடுவது போல இங்கே இயக்குனர் ஆறு குறும்படங்கள் எழுதி அதை இயக்கி ஒரே படமாக தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். இது போல முயற்சிகள் உலகெங்கும் நடக்கின்றன. பல இயக்குனர்கள் இணைந்து உருவாக்குவார்கள். தமிழில் கார்த்திக் சுப்பாராஜ் முயன்றார். ஆனால் Wild Tales ஒரே இயக்குனரின் கைவண்ணம்.

படத்தின் titles ரகளையான பின்னணி இசையுடன் அசரடிக்கும் visuals உடன் வரும் போது 'இது ஏதோ புதுசான படமா இருக்க போது போல' என்று மனம் எதிர்பார்க்க தொடங்கி விடும்.

ஒவ்வொரு கதைக்கும் வித விதமான நிறம், பின்புலம், இசை என்று விருந்து படைக்கிறார்கள். ஒரு கதை ஆகாயத்தில் என்றால், அடுத்த கதை இரவில், மழை நாளில். அடுத்த கதை பாலைவனம் போன்ற வறண்ட நிலத்தில். குடும்பம் சார்ந்து இரண்டு கதைகள். இறுதியாக திருமண விழா விருந்து பின்புலத்தில் ஒன்று.

மனிதர்கள் உணர்ச்சிகளை, கோபத்தை, சினத்தை, அறச்சீற்றத்தை அடக்கி கொள்ள நிர்ப்பந்திக்க படுகிறார்கள். சமூக அமைப்பு கோபப்படுபவனை, உண்மை பேசுபவனை, கொஞ்சம் தள்ளி வைத்தே பார்க்கிறது. காரியம் ஆக வேண்டும் என்றால் சினம் தவிர் என்கிறது. அதில் சில வெடிப்புகள், உடைப்புகள் ஏற்படும் போது அவை Wild Tales ஆகும்.

Thursday 1 December 2016

ஓரு கூர்வாளின் நிழலில் - விழலுக்கு இறைத்த குருதி


இங்கே, தமிழ் நாட்டில் 1988ம் வருடம் பிறந்த நான் விவரம் தெரிந்த நாளில் இருந்து விடுதலை புலிகளின் வீர சாகச கதைகளை கேட்டு வளர்ந்தேன். 5 வயது இருக்கும் போது பள்ளியில் சேட்டை செய்ததாக என்னை அடித்த ஒரு ஆசிரியையிடம் 'இரு வவுனியாவுல இருக்க துப்பாக்கியை எடுத்திட்டு வர சொல்லுதேன், ஒரு குண்டுல இந்த பள்ளிக்கூடம் தரை மட்டம் ஆகிடும்' என்று மிரட்டல் விட பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர், முதல்வர் வரை கூடிவிட்டனர்.

5 வயதுக்கு கொஞ்சம் அதிகமாக தெரிந்தாலும் நான் இப்படி பேசும் அளவுக்கு இங்கே விடுதலை புலிகள் பற்றி குடும்பங்களில் பேசி கொண்டிருந்தனர். இயக்கத்தின் மீது அசைக்க முடியாத பற்று, மதிப்பு, நம்பிக்கை கொண்டிருந்தனர். போர் முடிந்து 7 ஆண்டுகள் ஆன பின்னர் கூட 40, 50 வயதுகளில் உள்ளோர் இயக்கம் மீது எந்த விமர்சனத்தை ஏற்று கொள்ள தயாராக இல்லை.

25 வயதிற்கு கீழ் உள்ளோருக்கு 99% இயக்கம் குறித்தோ அங்கே நடந்து முடிந்த சண்டை குறித்தோ, மரணித்த மக்கள் குறித்தோ கவலையோ, சிந்தனையோ இல்லை. மேலும் ஈழம் குறித்து பேசுபவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே பல முறை கேட்டு சலித்த விடயத்தை தான் பேசுவார்கள். அங்குள்ள மக்களுக்கு இதனால் புல் முனை அளவு கூட பிரயோசனம் கிடையாது.

தற்செயலாக அ. முத்துலிங்கத்தின் கதைகள் வாசிக்க ஆரம்பித்து, ஷோபா சக்தி, சயந்தன் என்று ஈழ எழுத்தாளர்களின் எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் பொருட்டு முன்னாள் இயக்க போராளி, தற்போது காலம் சென்ற தமிழினி அவர்களின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' வாசித்தேன்.

அய்யா முத்துலிங்கம் இயக்கம் உருவாகும் முன்பே வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டதால் அவருடைய கதைகளில் பெரும்பாலும் இங்கே நடந்த போர் குறித்த சித்திரம் இருக்காது. ஆனால் புலம் பெயர்ந்த மக்கள் குறித்த கதைகள் அனேகம். ஒரு கதையில் வீட்டை விட்டு இயக்கத்திற்கு செல்லும் மகள் குறித்து எழுதிய நினைவு. தலைப்பு நினைவில் இல்லை.

ஷோபா சக்தியின் கொரில்லா, ம் நாவல்களும், சிறுகதைகளும் இயக்கம் மீது விமர்சனம் வைக்க தவறுவதில்லை. அதே சமயம் இலங்கையின் அரச பயங்கரவாதத்தை வெளிக்கொணராமலும் இல்லை.

சயந்தனின் ஆறா வடு மற்றும் பெயரற்றது மட்டுமே வாசித்துள்ளேன். ஆதிரை வாங்கியாகி விட்டது வாசிக்க தொடங்க வேண்டும்.

மேற்சொன்ன மூவரும் புனைவு எழுத்தாளர்கள். அவர்கள் எழுத்தில் நான் காணும் ஒற்றுமை அங்கதமும் அபத்தமும். ஷோபா சக்தியின் சமீபத்திய சிறுகதை 'மிக உள்ளக விசாரணை' சிறந்த உதாரணம்.

நான் பெரும்பாலும் சுய சரிதை வாசிப்பதை தவிர்த்து விடுவேன். காந்தியின் சுய சரிதை வாங்கி பத்து வருடம் ஆகிறது. ஒவ்வொரு முறையும் 10 அத்தியாயம் தாண்டாது. பிறகு கிடப்பில். The Diary of Anne Frank அதனாலேயே வாங்கவே இல்லை. The Story of Helen Keller மட்டும் வாங்கி வாசித்தும் விட்டேன்.

ஏதோ ஒரு உந்துதலில் 'ஒரு கூர்வாளின் நிழலில்' ஒரு சுய சரிதை என்று தெரிந்தும் வாசிக்க எடுத்து விட்டேன். வாசித்தும் விட்டேன். நான் புனைவில் வாசித்தது எந்த அளவு உண்மை என்று அறிய விரும்பினேனா? இயக்க தலைவருக்கு என்ன ஆனது என்று அறியும் ஆவலா? இலங்கை ராணுவம் குறித்து என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்க்கவா? இது எல்லாம் சேர்ந்தா இல்லை ஒரு வீர சாகச கதையை எதிர் பார்த்தேனா என்று தெரியவில்லை.

ஆனால் ஈழம் குறித்த எழுத்துக்களை வாசிக்க தொடங்கிய பின் இயக்கம் மீது உள்ள விமர்சனங்களின் நியாமும் புரிகிறது. இதை சொன்னதற்கு என் மீது நீங்கள் கல்லெறியும் முன் இயக்கம் குறித்து அன்ரன் பால சிங்கம் என்ன சொன்னார் என்று புத்தகத்தில் ஒரு இடத்தில் தமிழினி சொல்கிறார், அதை வாசித்து விட்டு வாருங்கள்.

தமிழினி இந்திய படைகள் இலங்கையில் இருந்து வெளியேறிய பிறகு இயக்கத்தில் இணைகிறார் 2009ல் போர் முடியும் வரை இயக்கத்தில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார். ஆனால் நேரடியாக யுத்தத்தில் கலந்து கொண்ட அனுபவம் மிக குறைவே. அரசியல் பிரிவில் அதிகமும் பணியாற்றியிருக்கிறார்.

சமாதான பேச்சு வார்த்தைக்கு முன்பாக புலிகள் மிக வலுவான நிலையில் இருந்தது தெரிகிறது. ஆனாலும் இழப்புகள் ஏராளம் தான். 2001 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு உலக நாடுகள் போராளிகள், தீவிரவாதிகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை கண்டு கொள்ள மறுத்ததால் சமாதான பேச்சு வார்த்தை 2006ல் முறிந்த போது புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டது.

தமிழினி இதற்கு இயக்க தலைவர் புரிந்த எதிர்வினை பற்றி புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அதை வாசிக்கும் நமக்கு அதில் இருந்தே இயக்கம் தோல்வியை நோக்கி நகர்ந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அரசியல் பேசி சாதிக்க வேண்டியதை துப்பாக்கியால் சாதிக்க முயன்றதன் பின்னால் மாண்ட மக்கள் எத்தனை? இதை இயக்க தலைவருக்கு எடுத்துரைக்க ஆட்கள் யாரும் இல்லை. அன்ரன் பாலசிங்கம் தவிர்த்து வேறு எவரும் தலைவர் சொல்லுக்கு மறுப்பேதும் பேசாமல் அவரை சர்வாதிகாரி போல ஆக்கி விட்டனர் என்பது தெரிகிறது.

2006க்கு பின்னர் இருந்த இயக்கம் என்பது ஒரு இயக்கமாக இல்லாமல் ஒரு கட்டு பெட்டி தனமான ராணுவ அமைப்பாக மாறிவிட்டதென்பது புத்தகத்தை வாசிக்கும் போது உணர முடிகிறது. முன்னைய வெற்றிகள் தந்த மிதப்பு நடைமுறையை புரிந்து கொள்ள விடாமல் அவர்களை தடுத்து விட்டது.

கருணா போன்ற போராளிகள் விலகி சென்றது இயக்கத்தை வலுவிழக்க செய்தது. மேலும் ராணுவம் புலிகளின் போர் முறை, ஆயுதம் பொருத்திய இடங்கள், அவர்களின் நிலைகள் என அனைத்தையும் நவீன கருவிகள் மூலமாக கண்டு கொண்டதாக தமிழினி சொல்கிறார். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை ராணுவ தரப்பில் யாராவது எழுதினால் தான் தெரியும்.

ராணுவத்திடம் சரண் அடைந்து அவர்கள் விடுவிக்கும் வரை சிறை வாழ்க்கையில் தன்னுடைய நம்பிக்கை சிதைந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு வரும் தமிழினி, ராணுவம் மற்ற போராளிகளை நடத்திய விதம் குறித்து எதுவுமே சொல்ல வில்லை.

இலங்கை மீது எந்த புகாரையும் வைக்க வில்லை. ராணுவம் குறித்து மிக குறைவாகவே கூறுகிறார். தன்னுடன் நல்ல விதத்தில் பழகிய சிங்கள அதிகாரிகள் குறித்து நினைவு கூறுகிறார். ஆனால் குற்றம் இழைத்த அதிகாரிகள் குறித்து எதையும் சொல்ல வில்லை.

போர் இறுதி கட்டத்தை நெருங்கிய பின் புலிகள் செய்ததாக தமிழினி சொல்லும் விடயங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இயக்கத்தின் தவறுகளை பற்றிய பதிவுகளில்   தயக்கம் இல்லாத போது ராணுவம் குறித்த பதிவுகள் censor செய்ய பட்டது போல் தெரிகிறது.

இறுதியாக முள்ளிவாய்க்கால் வரை வந்தே சரண் அடைகிறார். ஆனால் முள்ளிவாய்க்கால் குறித்து உலகமே பேசிக்கொண்டிருக்கும் போது அதை பற்றி மிக குறைவாக கூறி கடந்து செல்கிறார்.

ஜனநாயக தன்மை இல்லாத ஒரு அமைப்பு நாளடைவில் எப்படி நொறுங்கும் என்பது புத்தகத்தை வாசிக்கும் போது தெரிகிறது. தமிழினம் அனுபவித்த இந்த பெருந்துயருக்கு இயக்கத்தில் ஜனநாயக தன்மை இல்லாதது முக்கிய காரணம்.

இயக்கத்தில் நிலவிய சாதி வேறுபாடுகள் அல்லது ஈழ சமூகத்தில் நிலவிய வேறுபாடுகள் குறித்து ஒன்றும் அறிய முடியவில்லை. ஷோபா சக்தி, சயந்தன் எழுத்துக்களில் இயக்கம் மற்றும் சமூகத்தில் நிலவிய சாதிய படிநிலைகள் சரிந்து விடாமல் இருக்க மக்கள் செய்யும் செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புத்தகம் மீதும், தமிழினி மீதும் பெரும்பாலும் எதிர் மறையான விமர்சனங்கள் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த சுய சரிதை நிச்சியம் முக்கியமான ஆக்கம்.  புலிகள் தரப்பு குறித்தும், அமைப்பு உருவாகிய பின் ஈழ மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விமர்சனத்தோடு பலரும் எழுதும் போது நாம் இன்னும் இந்த போராட்டத்தை பற்றி புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். போலவே இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய மனசாட்சி உள்ள ஆட்களை வைத்து அவர்கள் தரப்பு உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.

ஆமாம் சரத் பொன்சேகா என்ன ஆனார்?! இறுதி யுத்தத்தில் நடந்ததை அவர் வெளிய சொல்லி விடுவார் என்று தான் அவரை சிறையில் அடைத்தவர் ராஜ பக்ச?

ராஜீவ் கொலை குறித்தும், அதற்காக சிறை வைக்க பட்டிருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி குறித்தும் தமிழினி ஒன்றும் சொல்ல வில்லை. மேலும் ராஜீவ் கொலைக்கு புலிகள் இயக்கம் பொறுப்பேற்று கொண்டதா என்ன?

தமிழினியின் சுய சரிதையில் இதையெல்லாம் தேடக்கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் இயக்கத்தில் பெண்களுக்கு கொடுக்க பட்ட பொறுப்புகள், அவர்களை தலைவர் நடத்திய விதம் பற்றி நிறைய தகவல்களை தருகிறார். ஆனாலும் இயக்கத்தில் இருந்த முக்கியத்துவம் தமிழ் சமூகத்தில் பெண்களுக்கு இல்லாமல் போனதையும், போர் முடிந்து எஞ்சிய பெண்போராளிகள் அனுபவித்த துன்பத்தையும், சமூகம் அவர்களை நடத்திய விதத்தையும் சொல்கிறார். பெண்கள் சமாதான பேச்சு வார்த்தையில் அதிகமாக பங்கெடுக்கும் போது சுமூகமான தீர்வுகள் சீக்கிரமே எட்டப்படும் என்றும் நினைக்கிறார்.

இந்த சுய சரிதையை அனைத்து தமிழ் பெண்களும் வாசிக்க வேண்டும். தமிழ் இளைஞங்கர்களும் தான். புத்தியை தீட்டுவதை விட்டு விட்டு எல்லா வெட்டி வேலையும் செய்வதில் நிபுணர்கள் ஆகி கொண்டிருக்கும் ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.
அரசியல் என்றால் வாக்களிப்பது மட்டுமே என்றும் அதையும் செய்ய தேவை இல்லை என்றும் நினைக்க ஆரம்பித்து விட்ட ஒரு தலைமுறை.

தமிழக மக்கள், இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு அற்றவர்கள் என்பது இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு வசதியாக போய் விட்டது. ஈழத்தில் நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்து விட்டனர். இங்குள்ள அரசியல் தலைவர்கள் ஈழ மக்களுக்காக செய்தது என்ன என்பதும் விரிவாக எழுதப்பட வேண்டும்.

இரண்டாம் உலக போருக்கு பின்னர் யூதர்கள் தங்களை ஒரு சக்தி மிகுந்த சமூகமாக உருவாக்கி கொண்டனர். தாங்கள் அனுபவித்த துயரத்தை இலக்கியத்தில் பதிவு செய்தனர், திரைப்படங்கள் ஆக்கினர். இன்று வருடத்திற்கு ஒரு படமாவது போரில் அவர்கள் அனுபவித்த கொடுமைகள் குறித்து வருகிறது. இந்த இலக்கிய கலாச்சார பின்புலம் அவர்களை சர்வதேச அரங்கில் வலிமையுடைய மக்களாக நிறுவி இருக்கிறது.

தமிழினத்திற்கு இலக்கிய கலாச்சார பின்புலத்திற்கு ஒரு குறைவும் இல்லையென்றாலும் ஈழம் குறித்த எழுத்துக்கள் தமிழ்  மக்களிடமும் (தன் மொழியில் தற்காலத்தில் எழுதப்படும் எது குறித்தும் எதுவும் அறியாத அப்பாவி இனம் தமிழினம்) மொழிபெயர்த்து உலக வாசகர்களிடமும் எடுத்து செல்ல பட வேண்டும். விமர்சிக்க பட வேண்டும். விமர்சனம் செய்து மேலும் முன்னகர வேண்டும். தமிழ் மொழிக்கான இருக்கைகளை சர்வேதச பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்த வேண்டும். ஒரு அறிவு சார்ந்த, பொருளியல் சக்தியாக தமிழ் மக்கள் எழுந்து நிற்கும் போது நமக்குறியதை யாரும் மறுக்க முடியாது.

பின் குறிப்பு:

அங்கங்க ரெம்ப உணர்ச்சி வச படுற மாதிரி தெரிஞ்சா அது தான் தமிழ் பேசும் மக்களை வாழ வைக்குது இல்லாட்டி லத்தீன், கிரேக்க கலாச்சாரத்துல தமிழும் சேர்ந்திருக்கும்.

Monday 7 November 2016

இலக்கியத்தில் ஏடு தொடங்குதல்...


தமிழ் நாட்டில் இலக்கியம் என்றால் சங்க இலக்கியம் என்றே பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரின் புரிதலிருக்கிறது. அவர்களிடம் 'உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்' என்ற கேள்வி ஒரு வித நகைப்பை தான் உருவாக்கும். நீங்கள் ஒரு வித தற்கொலை தன்மையுடன் உங்களுக்கு தெரிந்த எழுத்தாளர் பெயரை சொல்லுங்கள் என்று கேட்டால், வள்ளுவர், இளங்கோவடிகள், பாரதி என்று சொல்லுவார்கள். சரி தான், இப்போ எழுதுற யார் பெயராவது தெரியுமா என்று கேட்டால், கலைஞர், கண்ணதாசன், வைரமுத்து, ராஜேஷ் குமார் என்று சொல்வார்கள்.

மனப்பாட போட்டிக்கு மட்டுமே பிறந்ததில் இருந்து படிக்கும் அவர்கள் செய்தி தாள்களை கூட படிப்பதில்லை. ஏன் செய்தி தாள் கூட வாங்குவதில்லை, படிப்பதில்லை என்ற கேள்விக்கு அதான் டிவில நியூஸ் வருதே என்று வேகமான மறுமொழி வரும். இப்படி இருக்கும் நிலைமையில், கடைசியா நீங்க என்ன புத்தகம் வாங்குனீங்க, படிச்சீங்க என்ற கேள்வி மிக அபத்தமான ஒன்று.

ஆனாலும் கடந்த பத்து வருடங்களாக கல்லூரிகளில் தமிழ், ஆங்கில இலக்கிய படிப்புகள் நிரம்பி வழிகின்றன. நீங்கள் தமிழ், ஆங்கில இலக்கிய மாணவ, பேராசிரியர்களிடம் மேற்கண்ட கேள்விகளை கேட்டாலும் மேற்கிடைத்த பதில் தான் கிடைக்கும். ஆங்கில இலக்கியம் படிக்க வருபவர்கள் பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க என்பதில் இருந்து வெளிநாட்டில் இருக்கும் சித்தப்பா சொன்னார் என்று பலரும் சொன்னதாக வந்து சேர்வார்கள். அனைவர் சொன்னதும் இளங்கலை படித்து விட்டு B.Ed படித்தால் வேலை உறுதி என்பதே.

தமிழ் வழி படித்தவர்களுக்கு சிறப்பு சலுகைகள் உள்ளன என்பது தான் தமிழ் இலக்கிய வகுப்பை நிறைய வைக்கிறது. TNPSC தொடங்கி UPSC வரை மனதில் கட்டம் கட்டி படிக்க வருபவர்கள் பலர்.

நிலைமை இப்படி இருக்கும் போது இலக்கியம் படிக்க வருபவர்களிடம் கடைசியா என்ன படிச்சீங்க என்று கேட்டால் அவன் சிரிக்காமல் என்ன செய்வான்??!!!

12ம் வகுப்பு தமிழ் துணை பாட நூலில் உள்ள கதைகள், எழுதியவர் பெயர் கேட்டால் அதெல்லாம் நினைவில் இருப்பதில்லை. அதன் தேவை முடிந்து விட்டதால் மறக்கப்பட்டு விட்டது. புதுமைப்பித்தன் கதை எப்படியும் இருக்கும் என்று அவர் எழுதிய கதையை பற்றி கேட்டால் ஆமாம் என்று பதில் வரும். கதையை வாசித்தவர்கள் அந்த வருடம் கல்லூரியில் நுழைந்த 500 முதலாமாண்டு மாணவர்களில் 10 பேர் இருந்தால் அதிகம்.

ஏன் வாசிக்கவில்லை?! ஆசிரியர் கதையை சொல்லுவார், கட்டுரை எழுத கோனார் உரை - பிறகெதுக்கு தங்களது பொன்னான நேரத்தை கதையை வாசிப்பதில் செலவு செய்ய வேண்டும்?! புதுமைப்பித்தனின் 'பால்வண்ணம் பிள்ளை' பரிந்துரைக்கப்பட்ட கதை.  4 பக்கம் கூட வராது. அதை வாசிக்க வக்கில்லாதவர்கள் கல்லூரி வரை வந்து விட்டார்கள். அதுவும் இலக்கிய வகுப்புக்கு.

தமிழில் ஒரு நாவலை கூட வாசிக்காமல் தமிழ் ஆசிரியர் ஆகி விட முடியும்; உபயம் - உரை நூல்கள். ஆங்கிலத்திற்கும் அவ்வண்ணமே.

இது ஏன் இப்படி நடக்கிறது?!

தமிழ் சமூகத்திற்கு கல்வி என்பது வேலைக்கான துருப்புச்சீட்டு.  வேறெதையும் வாசிப்பது மகா பாவம். ஆனால் இந்த சமூகம் எடுத்ததுக்குகெல்லாம் கல் தோன்றி, மண் தோன்றி என்று பிதற்றும். நிலைமை இப்படி இருக்கும் போது ஆங்கிலம் படிக்க வருப்பவனிடம் Social History of England, History of English Literature, Literary Forms, Chaucer, Shakespeare, phonetics என்றால் அவன் என்ன செய்வான்?!

தமிழிலும் இதே நிலவரம் என்று நினைக்கிறேன். தமிழ் சிறுகதை, நாவல்கள் வாசித்த, வாசிக்கும் ஒரு பள்ளி, கல்லூரி தமிழ் ஆசிரியரை நான் சந்திக்க காத்து கொண்டிருக்கிறேன்.

இப்படி தமிழனுக்கு தமிழ் எழுத்து உலகம் குறித்து எதுவுமே தெரியாத போது, பள்ளியில் இலக்கியத்தை அறிமுக படுத்தாமல் விட்டு விட்டு, வீடுகளில் பிறந்ததில் இருந்து டிவி பார்த்து வளர்ந்து இப்போது இணைய அடி தடிகளில் இறங்கும் இளைய தலைமுறையிடம் இலக்கியத்தை எப்படி அறிமுக படுத்த முடியும்?!

இது அவசியம் தானா?!

பாரதியார் பிறந்த நாளுக்கு நமது பிள்ளைகளுக்கு பாரதியார் வேசம் கட்டுபவர்கள் நாம். எட்டயபுர மாணவர்கள் ஒருவரிடம் கூட பாரதியார் கவிதை புத்தகம் கிடையாது என்பது அதிர்ச்சி அடைய வேண்டிய ஒன்று அல்ல. ஆனால் திருநெல்வேலியில் இருந்து கொண்டு அல்வா சாப்பிடாமல் இருப்பது கண்டிக்க பட வேண்டிய செயல் இல்லையா?!

இனி வரும் வருடங்களில் இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அப்துல் கலாம் வேசம் போடுவார்கள்.

எதற்காக இலக்கியம் படிக்க வேண்டும்?! என்ற கேள்வி மிக விரைவாக வந்து விழும். நாம் பதிலுக்கு எதுக்காக பொறியியல், மருத்துவம் என்று ஆரம்பிக்க கூடாது. வயிற்று வாதிகள் அசிங்கத்திற்கு அஞ்சாதவர்கள்.

எதற்காக ஒரு நாளைக்கு 5 மணி  நேரம் டிவி பார்க்க வேண்டும்?! மாசம் 250 ரூபாய்க்கு net card போட்டு fb, whatsapp, hike, instagram என்று நாள் ஒன்றுக்கு விழித்திருக்கும் நேரம் முழுதும் இணையத்தில் வாழ வேண்டும்? என்று பதில் கேள்வி எழுப்ப வேண்டும்.

எப்போதும் இந்த மாதிரி கேள்விக்கான பதில் இன்னொரு கேள்வியிலேயே இருக்க முடியும். யாரும் சொல்லி தராமலேயே சராசரி கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் சினிமா சமாசாரம் எல்லாம் தெரிகிறது!!! ஆனா இலக்கியம்?!

வேறெதுவும் கிடைக்காமல் அல்லது வேலையை மட்டுமே மனதில் வைத்து வந்து தமிழ், ஆங்கில இலக்கியம் படித்து ஆசிரியர் ஆனவர்கள் தான் தமிழ் நாட்டில் இப்படியொரு இலக்கிய வாசிப்பு இல்லாமல் செய்தது. அவர்களே படிக்காத போது மாணவர்கள் எப்படி படிப்பார்கள்?!

இந்நிலையில் எதன் பொருட்டு மாணவனை இலக்கியம் வாசிக்க வைப்பது?! கல்லூரியில் படிக்கும் ஆயிரம் பேரை வாசிக்க வைக்க முடியுமா?! ஆனால் தமிழில் இலக்கியம் என்ற ஒன்று இன்னும் எழுத படுகிறது என்பதை சொல்ல முடியும். அந்தந்த ஊர்களில் உள்ள எழுத்தாளர் குறித்து அறிமுகம் செய்து வைக்க முடியும். வாசிப்பது அவரவர் விருப்பம்.

நான் புதிதாக செல்லும் அனைத்து வகுப்புகளிலும் கி. ராஜநாராயணன் எழுதி தொகுத்த நாட்டு புற கதைகளில் இருந்து நாளுக்கு ஒன்று என்று முதல் மூன்று நாட்கள் கதைகளை சொல்லுவேன். பின்னர் நாஞ்சில் நாடனின் தன் ராம் சிங், எஸ். ராமகிருஷ்ணனின் குதிரைகள் பேச மறுக்கின்றன, ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு, மாடன் மோட்சம், சுஜாதாவின் நகரம், அ. முத்துலிங்கத்தின் கோப்பைகள் என்று முதல் 10 வகுப்புகளில் கடைசி 15 நிமிடத்தை கதை சொல்ல பயன் படுத்துவேன்.

கதையை கூர்ந்து கவனிக்காத ஆள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சினிமா நடிகரின் விசிறியாக இருப்பார். அவர்களுக்கு எதுவும் ஏறாது. மற்ற படி அனைவரும் தினம் என்ன நாள் முழுதும் கதை கேட்க தயாராகவே இருப்பர்.

பின்னர் நான் சொன்ன கதைகளை print out எடுத்து வாசித்து பாருங்கள் என்று கொடுக்கும் போது தான் எத்தனை பேர் உண்மையில் வாசிக்க விரும்புகின்றனர் என்று தெரியும். என்னடா ஆங்கிலம் படிக்க வந்த இடத்தில் தமிழ் வாசிக்க சொல்கிறான் இந்த ஆள் என்று மண்டையை குழப்புகிறவர்கள் அனேகம்.

சரி இதை ஏன் செய்ய வேண்டும்?!

தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, உலக சினிமாக்களை ஆராய்ச்சி செய்கிறோம், Oscar விருது குறித்து மாய்ந்து மாய்ந்து பேசுகிறோம், அமெரிக்கா தேர்தல் குறித்தெல்லாம் கவலை படுகிறோம். அப்படி இருக்கும் போது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழ் இலக்கியம் வாசிப்பது அப்படி ஒண்ணும் பாவமான, இழிவான செயல் இல்லையே!!! மேலும் தமிழில் எழுதப்படும் எது குறித்தும் எதுவும் தெரியாத நாம் எப்படி உலக ஞானத்தை உள் வாங்கி கொள்வோம்.?!

தாய்மொழி வழிக் கல்வி தான் சிறந்தது என்று பேசுபவர்கள் எவரும் ஒரு நாளும் தமிழ் மொழியில் கடந்த 100 வருடங்களாக எழுத பட்டு வரும் எது குறித்தும் வாய் திறந்து பேசுவதில்லை. அவர்கள் வெறும் அரசியல் கூலிகள் தானே!!??

நான் என் மாணவர்களிடம் முதலில் உள்ளூர் எழுத்தாளர் நாலு பேரையாவது வாசியுங்கள் பின்னர் ஆங்கிலத்தில் எங்கிருந்து தொடங்குவது என்று சொல்கிறேன் என்று சொல்லுவேன்.

இலக்கியத்தில் ஏடு தொடங்குதல்...

நான் அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் சேர்ந்து விட்டு ஒரு நோக்கமில்லாமல் சுத்தி கொண்டிருந்த போது என்னுடைய senior ஒருவர் நூலகத்திற்கு அழைத்து சென்று Paulo Coelho எழுதிய The Alchemist புத்தகத்தை எடுத்து தந்து வாசிக்க சொன்னார். புத்தகம் சுவாரசியமாக இருக்கவே மூன்று நாளில் படித்து விட்டேன். பின்னர் இவன் தான் பாலா, Jeffery Archer கதைகள் என்று எடுத்து தந்தார். அதில் இருந்து நானே தேடி வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.

இங்கே The Alchemist என்றால் பையன் நம்மை சந்திப்பதை தவிர்த்து விடுவான். அதனால் இவன்  தான் பாலாவில் இருந்து தொடங்குவது. நமக்கு எதுவும் சினிமாவாக இருக்க வேண்டும். சினிமா ஆளின் புத்தகத்தை படிக்க திராணியற்றவர்களும் உண்டு. அவர்கள் விதி படி நடக்கட்டும்.

பின்னர் ஜெயமோகனின் பனி மனிதன், கி. ராவின் கோபல்ல கிராமம், அ. முத்துலிங்கத்தின் கடவுள் தொடங்கிய இடம், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு என்று வாசிக்க சுவாரசியமான ஆனால் இலக்கிய தரம் மிகுந்த புத்தகங்களை குடுத்து அவர்கள் வாசித்து விட்டால் பின்னர் அவர்களுடைய பாதையை அவர்களே கண்டடைந்து விடுவார்கள்.

இதனால என்ன பயன்?! இது உனக்கு சோறு போடுமா?! என்று Practical ஆன ஆட்கள் கேட்பார்கள்.

அவர்கள் கேள்வி 100% சரி. பாரதியார், புதுமைப்பித்தன் தொடங்கி இன்றும் தமிழ் கவிஞர், எழுத்தாளர் யாரும் வாழ்வாங்கு வாழ்ந்து விடவில்லை. எழுதுபவன் பிச்சை எடுக்கும் நிலைமையில் இருக்கும் போது வாசிப்பவன் குறித்து கவலை எழவே செய்யும்.

அவர்களிடம் நீங்கள் பார்க்க தான் வாரம் நாலு சினிமா வெளியாகிறது. IPL,TV சீரியல், Dubbing சீரியல், திரைப்படம், திரையிசை பாடல் சேனல் எல்லாம் இருக்கிறது. உண்டு , உழைத்து, உறங்கிய நேரம் போக ஆக்க பூர்வமாக tv பாருங்கள் என்று சொல்லி அவர்கள் கைப்பேசி எண்ணை நமது கைப்பேசியில் இருந்து அழித்து விட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டும்.

வாசிப்பவர்கள் பாடு பெரும் திண்டாட்டம் தான். தமிழ் சூழலில் அமைதியாக அமர்ந்து வாசிக்க ஒரு இடம் கிடைப்பது பாலைவனத்தில் நீர் ஊற்றை காண்பது போல அரிதானது. வாசிப்பவர்களிடம் வாசிப்பை ஒரு hobby யாக தொடருங்கள். TV, சினிமாவிற்கு செலவு செய்யும் பணத்தை, நேரத்தை புத்தகம் வாங்க, வாசிக்க செலவு செய்யுங்கள். அப்படி செய்யும் போது தமிழ் மொழியின் மரணத்தை நீங்கள் தள்ளி போடுகிறீர்கள் என்று சொல்ல வேண்டும்.

செம்மொழி, இரண்டாயிரம் வருட பாராம்பரியம் மிக்க மொழி, இலக்கிய வளம் நிறைந்த மொழி என்று மேடையில் உளறினால் ஆச்சா?! தமிழுக்காக என்ன செய்தோம்?!


Friday 4 November 2016

Cruel Winter Blues - குரோதத்தை வெல்லும் அன்பு


The Godfather படத்தை நீங்கள் பார்த்திருக்கும் பட்சத்தில் ஒரு gangster படம் என்றால் உங்கள் மனதில் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். Scarface, Goodfellas, Donnie Brasco, Road to Perdition, American Gangster போன்றவை கட்டாயம் பார்க்க வேண்டிய gangster திரைப்படங்கள்.

ஆசிய சினிமாவில் ஹாலிவுட்க்கு சற்றும் சளைக்காமல் அனைத்து வகைகளிலும் படம் எடுப்பதில் வல்லவர்கள் தென் கொரிய இயக்குனர்கள். a bittersweet life, A Dirty Carnival, Nameless Gangster என்று அவர்களும் அட்டகாசமான Gangster திரைப்படங்களை எடுத்திருக்கின்றனர்.

Cruel Winter Blues ஒரு gangster திரைப்படம் தான். ஆனால் மேலே நாம் பேசிய படங்கள் எது போலவும் இல்லாமல் வேறொரு பாதையில் பயணிக்கிறது இப்படம்.

ஆரம்ப காட்சியில் subway போல இருக்கும் ஒரு இடத்தில் ஒருவன் வேகமா ஓடுகிறான். எதிரில் ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருக்க அவர்களில் புகுந்து விரைகிறான். அவனை முகமூடி அணிந்த ஒருவன் துரத்துகிறான். பின்னர் எதிரில் இருந்து வந்த ஒருவன் அவனை மடக்கி கத்தியால் குத்துகிறான். தொடர்ந்து வந்தவனும் குத்துகிறான். வாயில் ரத்தம் வழிய குத்தப்பட்டவன் யாரையோ எதிர்பார்த்து சரிந்து விழுகிறான்.

இந்த முதல் காட்சி தான் இந்த படத்தின் ஆதார காட்சி. இந்த காட்சி படத்தில் மீண்டும் மீண்டும் வருகிறது. ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் நமக்கு படத்தின் கதை மாந்தர்கள் பற்றி அதிகம் சொல்லுகிறது.

இதற்கு அடுத்து வரும் காட்சி The Godfather படத்தை நியபகப்படுத்தும் ஒரு party. அங்கு குழுமியிருக்கும் gang ன் பல படிநிலைகளில் இருக்கும் அனைவரையும் காட்சி படுத்திய பின் கதைக்குள் நுழைகிறது.

Jae Mun gang ல் இடை நிலையில் இருக்கும் ஒரு Gangster. சிறை சென்று மீண்டவன். தனது தலைவனிடம் பேசி எதிர் gang ல் இருக்கும் ஒருவனை கொல்ல அனுமதி வாங்குகிறான். நண்பனை கொன்றதற்கு பழிக்கு பழி வாங்க போவதாக கூறுகிறான். தலைவருக்கு இதில் உடன் பாடு இல்லை என்றாலும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறார்.

Jae Mun தனது உதவியாளன் Chi Guk உடன் ஒரு இரவு முழுவதும் பயணம் செய்து Seoul ல் இருந்து Bulgyo என்ற சிற்றூருக்கு செல்கிறான். கடை போடுகிறோம் என்கிற பாவனையில் அங்கே ஒரு வாரத்தில் வர இருக்கும் Dae Sik ஐ கொல்வதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

Chi Guk ஒரு முன்னால் Taekwondo வீரன். அதில் சோபிக்க வழியில்லாமல் gang ல் சேர்ந்தவன். Jae Mun ஐ குருவாக நினைக்கிறான். அவன் இவனை அடிக்கும் போதும், திட்டி அவமான படுத்தும் போதும் பொறுமையாக வாங்கி கொள்கிறான். ரெண்டு பேருக்கும் இடையில் முரண் பாடுகள் நிறைய இருந்த போதிலும் Jae Mun க்கு உதவி செய்யவே தான் உடன் வந்திருப்பதை உணர்ந்து நடந்து கொள்கிறான்.

Dae Sikன் அம்மா அந்த ஊரில் ஒரு சாப்பாட்டு கடை நடத்துகிறார். அங்கே சென்று இருவரும் சாப்பிடுகிறார்கள். அவர் ஒரு ரகளையான ஆள். Jae Mun பேசுவதற்கு பதில் சொல்லி அவன் வாயினை அடைக்கிறார்.

பின்னர் ஒரு முறை அருகில் இருக்கும் ஊருக்கு பஸ்சில் போக இருந்தவரை  Jae Mun தன்னுடைய காரில் கட்டாயப்படுத்தி அழைத்து செல்கிறான். அவர் தன்னுடைய மகனை பார்க்க செல்கிறார் என்று இவன் யூகிக்கிறான். ஆனால் அவர் தன்னுடைய இன்னொரு மகனுக்கு புத்தகம், துணி எல்லாம் வாங்கி அனுப்புகிறார். உடன் வந்ததற்கு Jae Mun க்கு பல வண்ண பூக்கள் படம் போட்ட சட்டை ஒன்றை வாங்கி கொடுக்கிறார்.

படத்தின் பெயரில் Cruel இருந்தாலும் இவர்களுக்கிடையில் நடக்கும் காட்சிகள் உங்களை வாய் விட்டு சிரிக்க வைக்கும். இந்த பகுதியில் ஒரு gangster எத்தகைய ஆள் என்பதை உணர்த்த ஒரு காட்சி வருகிறது. அது ஒரு CCTV கோணத்தில், அல்லது birds eye view வில் இருக்கிறது. இது போல 10 நொடி காட்சியில் ஒரு கதா பாத்திரத்தின் குணத்தை, பின் புலத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் கொரிய படங்களின் சிறப்பு.

அதற்கு அடுத்த நாள் Dae Sik ஊருக்கு வருகிறான். Jae Mun, Chi Guk இணைந்து காய்களை நகர்த்துகிறார்கள்.

மறுநாள் Dae Sikன் அம்மா Jae Mun யிடம் தன்னை harbour க்கு அழைத்து செல்லுமாறு கேட்கிறார். முதலில் மறுக்கும் Jae Mun பின்னர் அழைத்து செல்கிறான்

Jae Mun Dae Sik யை கொன்றானா?! Dae Sik ன் அம்மா Jae Mun எதற்காக அந்த ஊருக்கு வந்திருக்கிறான் என்பதை கண்டு கொண்டாரா?! Chi Guk இழந்து விட்ட தனது சுயத்தை மீட்டானா?! Dae Sik வரும் போது விருந்து வைக்க அந்த அம்மா வளர்த்த நாய் என்ன ஆனது?!  படத்தை ஒரு முறை பாருங்கள்.

Jae Mun தான் கதா நாயகன் அல்லது மைய கதா பாத்திரம் என்பதை ஏற்று கொள்ளவே ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. ஒரு கதா நாயகனுக்குரிய எந்த குணமும் அவனுக்கு இல்லை. தான்  சொல்வது அனைத்தையும் Chi Guk கேட்க வேண்டும், அனுமதிக்கும் போது தான் சிரிக்க வேண்டும் என்கிறான்.  பார்வையாளர்களை எரிச்சல் படுத்தும் அளவுக்கு Jae Mun நடந்து கொள்கிறான். ஆனால் அது தான் அந்த கதா பாத்திரத்தின் வெற்றி என்று நாம் உணரும் போது படம் முடிந்து இருக்கும்.

இப்படி கதா பாத்திரங்களை Takeshi Kitano நடித்து இருக்கிறார். எனினும் இங்கே Jae Mun ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டே அவர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்.

நம்மூரில் மனோரமா ஆச்சி செய்த ஒரு role போல தோன்றினாலும் Dae Sik ன் அம்மாவாக நடித்து இருக்கும் பாட்டியின் நடிப்பு 10000 வாலா பட்டாசு. இப்படி ஒரு முக்கியத்துவம் உள்ள பெண் கதா பாத்திரத்தை திரைப்படங்களில் பார்த்து பல காலமாகி விட்டது. 'அம்மா என்றால் அன்பு' என்பதற்கு உதாரணமாக இருக்கிறார். Jae Mun தன்னுடைய இன்னொரு மகன் என்றே சொல்கிறார். அவர் எந்த சூழ் நிலையில் அதை சொல்கிறார் என்பதை பார்த்த உடன் உங்கள் மனதில் இந்த கதா பாத்திரம் நிரந்தரமாக தங்கி விடும்.

இது ஒரு பழி வாங்கும் கதை என்று ஒரு வரியில் சொல்லி கடந்து செல்ல முடியாத அளவுக்கு முக்கியமான திரைப்படம். இது இப்படத்தின் இயக்குனருக்கு முதல் படம் என்பது இன்னும் ஆச்சரியம். அவருடைய இரண்டாவது படம் The Man from No where என்ற அட்டகாசமான action படம்.

Method Acting வகை நடிக்கும் முறை உலகம் முழுதும் பின்பற்ற படுகிறது. Marlon Brando, Di Niro, Al Pacino, Daniel Day Lewis அதனை உயிர் மூச்சாக கொண்ட நடிகர்கள். ஆனால் ஒரு புதிய ரசிகருக்கு அவர்கள் மீது அவ்வளவு எளிதில் ஏற்படாத ஒரு ஈர்ப்பு, பிரமிப்பு கொரிய நடிகர்களை பார்க்கும் போது ஏற்படும்.  திரையில் அழுவதற்கு அவர்கள் தயங்குவதே இல்லை. ரத்தமும் சதையுமாக என்பதையெல்லாம் தாண்டி ஒரு வெறித்தனமான performance கொரிய படங்களில் அதிகம் காண முடிகிறது. Cruel Winter Blues அத்தகைய performance கடைசி 20 நிமிடத்தை ஒரு துன்பியல் நாடகத்தின் இறுதியில் கிடைக்கும் cathartic அனுபவத்தை அளிக்கிறது.

பொறுமையாக பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம், உங்கள் நேரத்தை கொடுக்கும் போது நிச்சயம் உங்களை அசர வைக்கும்.

For More Details - http://www.imdb.com/title/tt0969367/?ref_=nv_sr_1


Saturday 24 September 2016

Black Coal, Thin Ice - பனியில் மறையும் சுவடுகள்



Murder Mystery என்பது எப்போதுமே சலிக்காத ஒரு genre. ஆனால் சில படங்களை ஒரு தடவைக்கு மேல் பார்க்க முடியாது. ஏனென்றால் மர்மம் தான் விடு்பட்டுவிட்டதே?!?! Mystic River போன்ற படங்களை இரண்டாம் முறை பார்க்கும் போது நடிகர்களின் performance ஐ தான் கவனிப்போம்.

மாற்றாக Seven, Zodiac, Memories of Murder, Tell Me Something போன்ற படங்களில் மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கும், அடடே இதை முதல் தடவை பார்க்கும் போது எப்படி கவனிக்காமல் விட்டோம் என்று ஆச்சரியப்படுவதற்கும் நிறையவே காட்சிகள் இருக்கும்.

Black Coal, Thin Ice படமும் இப்படி ஒரு murder mystery தான். இப்படி மர்மப்படங்களை பற்றி எழுதும் போது மிக குறைவாக தான் சொல்ல வேண்டி இருக்கும். பின்னர் மர்மத்தை இங்கே அவிழ்த்து விட்டால் படம் அசுவாரஸ்யமாக மாறிவிடுமே!!

சீன நாட்டு திரைப்படம் என்றாலும் மேற்கூறிய ஆங்கில, கொரியா படங்களின் பாதிப்பு அனேகம் உண்டு.

படம் "Heilongjiang province in far northeast Manchuria"வில் நடக்கிறது. நாம் சீனா என்றாலே திரையில் பார்க்கும் Shanghai, Beijing, Macau, Hong Kong போன்ற நவீன நகரங்களில் இருந்து எந்த தொடர்பும் இல்லாத ஒரு small town.

Seven படம் எங்கே நடக்கிறது என்ற குறிப்பே படத்தில் இருக்காது. எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும். அதோடு படத்தின் மைய கதா பாத்திரங்கள் ஒரு புழுக்கம், படபடப்பு, பயம், எரிச்சல் கலந்த உணர்வோடு படம் முழுதும் வருவார்கள். இங்கே மழை என்பது உன்னதமான, காதலுக்குரிய பின்னணி என்பது போன்ற பிம்பங்கள் மாறி ஒரு மர்மத்தன்மை கொண்டதாக மாறி விடுகிறது.

அது போல Black Coal, Thin Ice படத்தில் 80 சதவிகித படம் முழுதும் பனி விழும் காலத்தில் நடக்கிறது. பனி விழுவது குற்றவாளியின் தடையத்தை மறைக்க ஏதுவானதாக உருக்கொள்கிறது.

முதல் இருபது நிமிடங்கள் என்னடா இது மிஷ்கின் படம் மாதிரி இருக்கு??!! Hollywood style 3 Act Structure follow பண்ற மாதிரி தெரியுது?! அப்டின்னு யோசிக்க வைக்கும் திரைக்கதை பின்னர் ஒரு police procedural என்று பொறுமையாக நகர்கிறது.

வருடம் 1999. நிலக்கரியை ஒரு பெரிய இரும்புக்கரம் அள்ளி லாரியில் போடுகிறது. அதில் ஒரு பொட்டலம் கிடக்கிறது. Cut to: ஒரு ஆணும் பெண்ணும் லாட்ஜ் என தோற்றமளிக்கும் இடத்தில சீட்டு விளையாடி கொண்டிருக்கிறார்கள். சட்டென காட்சி மாறி conveyor beltல் நகரும் நிலக்கரி நடுவில் ஒரு வெட்டப்பட்ட கை இருப்பதை காட்டுகிறது. மீண்டும் அறைக்கு திரும்பி இருவரின் கைகளும் பின்னி பிணைந்து முயங்குவதை தொடர்கிறது.

நாம் நிமிர்ந்து உட்கார்ந்தால் காட்சி மீண்டும் அந்த ஆணும் பெண்ணும் ஒரு ரயில் நிலையத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு மல்லுக்கட்டி உருளுவதை காட்டி அவர்கள் கணவன் மனைவி என்றும் அவர்கள் உறவை முறித்து கொண்ட பின் நடந்த கடைசி சந்திப்பும் என்று தெரிகிறது.

பின்னர் காட்சி நிலக்கரி தொழிற்சாலைக்கு நகரும் போது வெட்டப்பட்ட கை குறித்து  விசாரிக்க வரும் காவல் துறை அதிகாரி இதற்கு முந்திய காட்சியில் சீட்டு விளையாடிய, பொது இடம் என்றும் பாராமல் தனது முன்னாள் மனைவியுடன் சண்டையிட்ட நபர் என்று தெரிகிறது. அவரது பெயர் Zhang.

பல துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் அந்த பிராந்தியம் முழுவதும் கிடைக்க குழம்புகிறது போலீஸ். ஒரு உடல் தானா இல்லை ஒன்றிற்கும் மேற்பட்ட உடல்களா என்று தேடுகிறார்கள். பின்னர் இறந்தவர் பெயர் Liang என்றும் அவரது மனைவி Wu ஒரு Laundry கடையில் வேலை செய்வதும் தெரியவருகிறது. இறந்தது தனது கணவன் தான்  என்று மனைவி உறுதி செய்ய, அடக்கம் செய்து சாம்பலை குடுக்கிறார்கள்.

குற்றவாளி என்று சந்தேகத்தின் பேரில் லாரி ஓட்டுனர் அண்ணன் தம்பிகளை போலீஸ் பிடிக்கிறது. இங்கே Pulp Fiction படத்தை நியாபாக படுத்தும் ஒரு shoot out உடன் படத்தின் வேகம் ஒரு நிதானத்தை அடைந்து விடுகிறது. இந்த குறிப்பிட்ட காட்சியின் பின்புலம், நிறம், சதுரங்க பலகை போன்ற தரை என்று இந்த படத்திற்கான விசேஷமான காட்சி மொழி ஒன்று உருவாகிறது. படம் ஒரு வித மஞ்சள் நிறம் கொண்டு வசிகரிக்கவும், பதற வைக்கவும் செய்கிறது.

இந்த shoot outல் Zhang காயம்பட்டுவிடுகிறன். பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் காட்சி தொடங்குகிறது. இதற்கு அடுத்து வரும் ஒரு sequence அப்டியே நம்மை அசரடிக்கும். அந்த காட்சியோடு படம் 2004ம் வருடத்திற்கு தாவி விடுகிறது. இப்பொது Zhang ஒரு drunkard ஆக மாறி, காவல் துறையிலிருந்து விலகி ஒரு தனியார் நிறுவனத்தில் safety officer வேலையில் இருக்கிறான்.

தற்செயலாக தனது போலீஸ் அதிகாரி நண்பனை சந்திக்கும் Zhang, 1999ல் நடந்தது போல மேலும் நடந்த இரண்டு கொலைகள் பற்றி தெரிந்து கொள்கிறான். கொலையுண்ட மூன்று நபர்களுடன் தொடர்புடைய ஒரே பெண் Wu என்பது தற்செயலானது அல்ல என்ற முடிவிற்கு போலீஸ் வருகிறது.

Wu செல்லும் பாதையில் பயணித்து நோட்டமிடுகிறது போலீஸ். Wu விடம் உள்ள ஏதோ ஒன்று Zhang ஐ ஈர்க்க பேசி பழக முயற்சிக்கிறான். தனது உடை ஒன்றை dry cleaning குடுக்கிறான். கடையின் முதலாளி Wu விடம் தப்பாக நடக்க முயற்சிக்கிறார். Iron box கையில் பட்டு காயம் ஏற்பட Zhang மருந்து வாங்கி வந்து தருகிறான்.

பனி கொட்டும் இரவில் Wu வீடு செல்லும் வரை Zhang பின் தொடர்கிறான். இடையில் ஒரு முறை தனது வண்டியை நிறுத்தி விட்டு செல்ல அதை யாரோ சேதப்படுத்தியதை பனியில் இருக்கும் கால் தடத்தை வைத்து யூகிக்கிறான்.

Wuவிற்கு Ice Skating பிடிக்கும் என்று அறிந்து கொள்கிறான். அவளுடன் ice skating செல்கிறான். அவளை தனிமையில் நெருங்க முயற்சிக்கிறான். இதற்கிடையில் குற்றம் குறித்தும் துப்பு துலக்க உதவி செய்கிறான்.

ஒரு மணி நேரம் இருபது நிமிடம் இருக்கும் போது வெட்டப்பட்ட உடல் எப்படி வெவ்வேறு இடத்திற்கு சென்றது, குற்றவாளி யார் என்று துப்பு துலங்கி விட என்னடா இது இன்னும் அரை மணி நேரம் இருக்கு அப்போ என்னாகும் என்று யோசித்தால் கியரை மாற்றி திரை கதை மேலும் அடர்த்தி ஆகிறது.

இப்படி பனி பொழியும் பின்னணியில் காதல் படம், பாட்டு என்று தான் நமக்கு தோணும். ஆனால் இங்கே இதை ஒரு suspense thriller கான பின்னணியாக பயன்படுத்தியுள்ளார் இயக்குனர். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற தலைப்பில் உள்ள முரணை போல இங்கே Black Coal, Thin Ice என்றால் இது ஒரு நபருடன் பொருத்தி பார்க்க வேண்டிய அடையாளம் இல்லை என்பது படம் பார்க்கும் போது நமக்கு தெரிகிறது.

மனிதர்கள் குற்றங்களை தங்கள் நலன் கருதி திட்டமிட்டு செய்வதில்லை. சில சமயம் தங்கள் மரியாதையை காப்பாற்ற ஒரு குற்றத்தை புரிந்து விட்டு அதை மறைக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் மறைக்க முயற்சிப்பது குற்றத்தை அல்ல அந்த குற்றம் வெளியே தெரியும் போது சமூகம்  தங்கள் மீது கொண்டுள்ள மரியாதையும் போய் விடும் என்பதால் தான்.

எந்த மிகைப்படுத்தலும் இல்லாத நடிப்பு, அருமையான பின்னணி இசை, ஒளிப்பதிவு என்று எல்லாமும் யதார்த்தற்கு பக்கத்தில் இருக்கும் இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும். ஒன்றிற்கும் மேற்பட்ட முறை பார்த்து ரசிக்க வேண்டிய படம்.

For More Details - http://www.imdb.com/title/tt3469910/?ref_=nv_sr_1

Tuesday 13 September 2016

Wolf Totem (Film) - புல்வெளி தேசம்



மனிதன் நினைவில் காடுள்ள மிருகம் என்று ஒரு கவிதை தொடங்கவோ முடியவோ செய்யும்.

காட்டில் இருந்து இன்று முதலாளித்துவ காலம் வரை மனித இனம் கடந்து வந்த தூரம் வரலாற்று புத்தகங்கள் படித்து அறிந்து கொள்ள கூடியது அல்ல.

இந்த பயணத்தில் நாம் எண்ணற்ற பறவைகளை, விலங்குகளை வீட்டோடு வைத்து பழக்க படுத்தி அவை நம் சொல் கேட்டு நடக்கும் அளவுக்கு செய்து இருக்கிறோம்.

ஆனால் சிங்கம், புலி போன்ற பெரிய மிருகங்களை அது போல செய்யமுடியவில்லை. சில பணக்கார அசடுகள் வீட்டில் வளர்த்து இருக்கலாம். ஆனால் அவைகளை நாம் கோழி, ஆடு, நாய், பூனை, மாடு போல வளர்த்து விட முடியாது. யானையை கூட நாம் tame செய்து தான் வைத்து இருக்கிறோம். அதனால் தான் அவை அவ்வப்போது மதம் கொள்கின்றன. (படிக்க; ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர்) யானை உட்பட சிங்கம், புலி போன்ற விலங்குகள் circus ல் perform செய்வதை நீங்கள் பார்த்து இருக்கலாம். ஆனால் எப்போதாவது ஒரு ஓநாய் எங்காவது வித்தை காட்டி பார்த்து இருக்கிறீர்களா?!!

Wolf Totem படம் சீனாவில் மாசேதுங் தலைமையில் நடைபெற்ற கலாச்சார புரட்சி தொடங்கிய இரண்டாம் ஆண்டு வாக்கில் தொடங்கி அடுத்த
 சில வருடங்கள் அதனால் ஒரு மங்கோலிய பழங்குடி இன மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்கிறது. அந்த மக்களின் மனசாட்சியாக இருக்கும் ஓநாய் இனத்திற்கு என்ன ஆனது என்று விவரிக்கிறது.

நாவல்கள் படம் ஆகும் போது நாவலில் இருக்கும் ஏதோ ஒன்று படத்தில் இல்லை என்று விமர்சனம் வரும். இந்த படத்திற்கு அப்படி என்ன விமர்சனம் வந்தது என்று தெரியவில்லை. படம் கச்சிதமாக இருந்தது. நாவல் காடு என்றால் திரைப்படம் என்பது மனிதன் உருவாக்கும் பூங்கா போன்றது. எனினும் சில படங்கள் புத்தகம் படித்த அளவுக்கு ஒரு அபாரமான மன எழுச்சியை குடுக்கும். Into The Wild, The Straight Story, JFK, Saving Private Ryan, Apocalypse Now போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.

Wolf Totem சம கால சீன இலக்கியத்தின் மீது உலகின் பார்வையை பதிய வைத்த நாவல். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல். நாவலை எழுதியவர் தனது உண்மையான அடையாளத்தை மிக தாமதமாகவே வெளியிட்டார். தனது பொருட்களை உலக நாடுகள் முழுதும் கொண்டு விற்கும் சீனா இந்த படத்தை பற்றி மூச்சு விட்டதாக தெரியவில்லை. The Jungle Book போன்ற படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தியாவெங்கும் வெளியாகும் போது இப்படி ஒரு படம் வந்த விவரம் இங்கே தெரியவேவில்லை. பெரிய மால்களில் உள்ள திரையில் வெளியிட்ட மாதிரியும் நினைவில்லை.

சீன பிரெஞ்சு கூட்டு தயாரிப்பு என்றபோதும் படம் சீனாவை மிக மேலோட்டமாகவாது விமர்சனம் செய்கிறது. அவதார் படத்துடன் இணைத்து பார்க்க வேண்டிய அளவிற்கு நிறைய ஒற்றுமைகள் உண்டு. ஆனால் இங்கே graphics சித்து வேலை எல்லாம் கிடையாது.

படம் இயற்கை, தத்துவம், அரசியல், வாழ்க்கை முறை, சுற்றுப்புறம் என்று பல விஷயங்களை பேசுகிறது.

Chen மற்றும் Yank ke என்ற இரண்டு மாணவர்கள் நகரத்தில் இருந்து மங்கோலிய பழங்குடி மக்கள் வசிக்கும் ஊருக்கு பாடம் சொல்லி குடுக்க வருகிறார்கள். இனக்குழு தலைவர் அவர்களின் பெட்டியை சோதித்து விட்டு தங்க அனுமதிக்கிறார். அவரின் குடிசைக்கு வெளியே கொடிகம்பத்தில் ஓநாயின் தோல் பறந்து கொண்டு இருக்கிறது.

தலைவர் அவர்களை அழைத்து சென்று அவர்கள் தங்க வேண்டிய இடத்தை காட்டி விட்டு ஆளுக்கு ஒரு லத்தி தருகிறார். அது நம்மூரில் பயன்படுத்தும் லத்தியை போல இரண்டு மடங்கு தண்டியாக இருக்கிறது. அதன் நுனியில் இருந்து மேல் நோக்கி ஒரு அடி நீளத்திற்கு திடமான கயிற்றால் கட்டப்பட்டு இருக்கிறது. அது எதற்கு என்று கட்டுரை முடியும் போது சொல்கிறேன். இல்லை நீங்களே படத்தை பார்த்து யூகித்து கொண்டாலும் மகிழ்ச்சி தான்.

ஓவியம் போல தெரியும் மாலை வானம். நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுவது போல பெய்யும் பனி. பச்சை புல்வெளி, அதில் அமைந்து இருக்கும் அவர்களின் கூடாரம் என்று படம் பார்ப்பதற்கு கண்ணுக்கு இனிமையானதாக இருக்கிறது. Bird's eye view என்பது போல wolf's eye view வில் பல காட்சிகள் உண்டு. ஓநாய்கள் மான்களை விரட்டும் போது இதயம் வேகமாக துடிப்பது போன்ற பின்னணி இசை படபடப்பை கடத்துகிறது.

ஓநாய்கள் இல்லாமல் தங்கள் நிலத்தின் சமன்பாடு குலைந்து விடும் என்று தலைவர் மீண்டும் மீண்டும் சொல்கிறார். ஆனால் உற்பத்தியை பெருக்குகிறேன் பேர்வழி என்று அழிவை நோக்கி அரசாங்கம் அப்பழங்குடி மக்களை இழுத்து சொல்கிறது. இந்தியாவில் வளர்ச்சி என்று நாம் எந்த திசை நோக்கி ஓடுகிறோம் என்று நம்மை யோசிக்க வைக்கிறது.

Tengger என்று தங்கள் கடவுளை பயபக்தியுடன் நினைத்து கொள்கிறார்கள். Tenggeriன் விருப்பப்படி நடக்கட்டும் என்று தங்களுக்கு நடக்கும் துன்பங்கள் குறித்து சமாதானம் கொள்கிறார்கள்.

படங்களில் பேசப்படும் வசனத்தை வைத்து படத்தை பற்றி யூகிப்பது நமது கற்பனையை, சிந்தனையை ஒரு படியாவது முன்னகர்த்தும். இந்த பதிவில் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை மேற்கோள் தருகிறேன். அதை படித்த பின் ஏற்படும் எதிர்பார்ப்பு நிச்சியம் உங்களை இந்த படத்தை பார்க்க வைக்கும் என்று நம்புகிறேன்.

(ஓநாய்களை பயமுறுத்தவம் தாக்கவும் தான் அந்த லத்தி என்றாலும் அவைகள் மீது விழும் அடி அதன் எலும்புகளை நொறுக்கி விட கூடாது என்று தான் லத்தியின் நுனியில் கயிறு கட்டியிருக்கிறார்கள்.)

இனக்குழு தலைவர்:

"His dream was to be free as the wolves."

"Genghis Khan defeated the armies of the world by studying the wolves."

"What are they waiting for? They have been waiting for this moment for months. The desire to kill tortures them. But they are not going to waste it because of haste. Wolves are smart and organized. They work together and obey their leaders decision. More than anything else they have patience. Life is about choosing the moment. Wolves and Mongols understand that."


"The problem for us Mongols  is that our history wasn’t written by us but mostly by our enemies."

"What is left is wolves share."

"You captured a god to turn it into  a slave."

Chen Zen:

"Capture the cub to study it."

"Chairman Mao says Study your enemy to defeat him."

Smuggler:

"To make fur clothes and things for foreign ladies."

பழங்குடிகளுக்கான அரசு அதிகாரி:

"You are here to pass on your knowledge and change these primitives."

"Being a leader is not about being liked. Sometimes you have to obey orders that your heart resents."

தற்போதைய தமிழகத்தில் மீனவ மக்கள் படும் துயரத்திற்கு அவர்களில் பேராசை பிடித்த சிலர் சக்தி மிகுந்த படகு மற்றும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் வலைகளை வைத்து கடலை அரித்து மீன் பிடிப்பது தான் காரணம். இது போல உலகமெங்கும் உள்ள பழங்குடி இன மக்கள் தங்கள் வாழ்வியலை தொலைத்ததற்கு பின்னால் உள்ள அரசியலை புரிந்து கொள்ள இந்த படம் ஒரு திறப்பை அளிக்கும்.

பின் குறிப்பு:

படத்தின் கதையை சுருக்கமாக தருவது, படத்தை பற்றிய அதிகமான தகவல்கள் படத்தை பார்க்கும் போது சுவாரஸ்யத்தை குறைத்து விடும் என்பதால் அவைகளை தவிர்த்து விட்டு படம் பேசும் அரசியலை முன் வைத்து இந்த பதிவு எழுதப்பட்டு உள்ளது.

Wolf Totem நாவல் ஓநாய் குலச்சின்னம் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப் பட்டுள்ளது. சி. மோகன் மொழிபெயர்க்க அதிர்வு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இயக்குனர் வெற்றி மாறன் இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்றே இந்த பதிபகத்தை தொடங்கினாராம்.

லத்தியில் கயிறு கட்டப்படுவதற்கான காரணத்தை கட்டுரையின் நடுவிலே எழுதி விட்டேன். ;-)

Bibliography:

1. Jared Diamond: Guns, Germs and Steel

2. Desmond Morris: The Naked Ape

3. ஜோ டி குரூஸ் - ஆழி சூழ் உலகு.

4. Jiang Rong - Wolf Totem

For More Details - http://www.imdb.com/title/tt2909116/?ref_=nv_sr_1

Saturday 3 September 2016

Bullhead - Boyhood to Beasthood



"Sometimes things happen in life that turns everybody silent. So silent that nobody dares to talk about it anymore. To no one. Not even themselves. Not in their own head, not aloud, not a fucking word. Because everything has been lingering. There deep in those in fields, year after year. But out of the blue it is all back. Just like that, from one day to another. It may be ever so long ago, there is always someone who digs it up again. Whatever you do, and whatever you think, one thing you can be sure of: you’re always fucked. Now, tomorrow, next week and next year, until the end of time. Fucked."

என்ற voice over உடன் படம் துவங்குகிறது. இதை தமிழில் மொழி பெயர்த்தால் குழப்பமே எஞ்சும். ஏற்கனவே Flemish மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. அதை மேலும் மொழி பெயர்ப்பது துல்லியமாக இருக்காது.

முதல் காட்சியில் கதா நாயகன் மல்யுத்த வீரனை போன்ற உடற்கட்டுடன் ஒரு SUV வண்டியில் வந்திறங்கி ஒரு மாட்டு பண்ணை உரிமையாளரை அடித்து மிரட்டுகிறான்.

நம்மூரில் ஆட்டு சந்தையில் ஆட்டின் எடையை கூட்ட புனல் வைத்து தண்ணீர் புகட்டுவது போல இந்த Belgium நாட்டு திரைப்படமான Bullheadல் மாட்டின் எடையை அதிகரிக்க பல்வேறு hormone injections செலுத்துகின்றனர்.

இந்த hormone injection சந்தையின் பின்புலத்தில் இயங்குபவர்கள், அதை தடுக்க முயலும் காவல் துறை அதிகாரிகள், Gangல் இருந்து கொண்டு informer வேலை செய்பவர்கள் தான் இப்படத்தின் கதா பாத்திரங்கள்.

இங்கே கதா நாயகன் ஒரு troubled individual என்பது ஒரு சில நிமிடங்களில் தெளிவு படுத்த படுகிறது. (Voice overயை மறுபடி வாசிக்கவும்) Submarino போல இதுவும் ஒரு மனிதன் தனது கடந்த கால துன்பியல் நிகழ்வு ஒன்றில் இருந்து வெளியேற துடிக்கும் கதையே.

என்னதான் ஐரோப்பிய யூனியன் என்று மார் தட்டி கொண்டாலும் அவர்களுக்குள்ளே வந்தேறிகள் என்ற சண்டை அனேகம் உண்டு போல, Belgium, French, Flemish என்று பல மொழி பேசும் கதா பாத்திரங்கள் என்று நகரும் படத்தில் நாம் ஹிந்தி பேசுபவனை வில்லன், காமெடியன் ஆக்குவது போல இப்படத்தில் இரண்டு கதா பாத்திரங்கள் உண்டு.

கதா நாயகன் Jacky தனது உறவினர் ஒருவருடன் தொழில் பேச செல்லும் இடத்தில தனது பால்ய கால நண்பனான Diedrikகை சந்திக்கிறான். இருவருக்கிடையே இருக்கும் estrangement எதனால் என்பது flash back மூலமாக தெரிய படுத்த படுகிறது.

Graphic Violence பார்த்து பழக்கம் இல்லாதவர்கள் flash back காட்சிக்கு பிறகு படத்தை தொடர்வார்களா என்பது சந்தேகமே!!!

Jacky மீதே கவனம் குவியும் படத்தில் அவனின் செயல்கள் அத்தனையும் காட்சிகளாக விரிகின்றன.

தன்னை பலமான ஆணாக காட்டி கொள்வதற்காக hormonal injections பயன்படுத்தி உடம்பை ஏற்றியதோடு இல்லாமல் manly ஆன after shave lotion வாங்க கடைக்கு போகிறான். அந்த கடையின் முதலாளியான பெண் இவனுடைய கடந்த காலத்துடன் சம்மந்த பட்டவள் என்பது அந்த காட்சி தொடங்கிய சில நொடிகளில் நம்மால் உணர்ந்து விட முடிகிறது. அந்த பெண்ணும் அவனை அடையாளம் கண்டு கொள்கிறாள்.

இங்கே கொஞ்சம் தமிழ் சினிமா வாசம் என்று பார்த்தால் உலகம் முழுக்க இளம் வயதில் ஆசைப்பட்ட பெண்ணை 20 வருடம் கழித்து சந்தித்தாலும் அந்த முதல் ஈர்ப்பை கடப்பது கஷ்டம் தான் போல.

இது வரை சமூகத்துடன் இணக்கமாக இல்லாமல் வாழ்ந்து வந்த Jacky அந்த பெண்ணுடன் நட்பு கொள்ள முயற்சிக்கிறான். அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு அந்த பெண்ணுடன் நடன விடுதிக்கு வந்த இன்னொரு நபரை கோமாவிற்கு போகும் அளவுக்கு தாக்கி விடுகிறான்.

Bull in a china shop என்று ஆங்கிலத்தில் ஒரு idiom உண்டு. Jacky அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்கிறான். அவனுக்கு அவன் தொழில் தவிர்த்து சொந்த வாழ்க்கை என்ற ஒன்றே இல்லை. அவனுடன் மனம் விட்டு பேச ஒரு உறவோ, நட்போ இல்லை. இது தான் அவன் அவனுடைய வாழ்க்கையின் திசையை மாற்றி விடுகிறது.

படத்தை பார்க்கும் போது உங்களுக்கு புரியும். அது என்ன அப்படி யாருடனும் பேச முடியாத அளவுக்கு பிரச்சினை அவனுக்கு வந்தது என்று. Amores Perros மற்றும் ஆடுகளம் போன்ற படங்களில் நாய் மற்றும் சேவல்களுடன் பழகும் படத்தின் பிரதான கதா பாத்திரங்கள் அந்த வளர்ப்பு பிராணிகளின் குண நலன்களை பிரதி பலிக்கிறார்கள். நாய் போல விசுவாசம் வைக்கிறார்கள் பின்னர் ஏமாந்து போகிறார்கள். சேவல் போல கொக்கரிக்கிறார்கள். ஒருத்தரை ஒருத்தர் முரட்டுத்தனமாக தாக்கி கொள்கிறார்கள்.

இங்கே Jacky ஒரு காளை மாட்டை நினைவுபடுத்தும் உடல் மொழியுடன் திரையை நிறைக்கிறான். என்ன பேசுவது என்று தெரியாமல் தரையை பார்த்தவாறே யோசித்து யோசித்து பேசுகிறான். அவனுக்கு பிடித்த பெண்ணிடம் பேச மிகவும் வெட்கப்படுகிறான்.

நாம் நன்கு அறிந்த Hollywood அல்லது இந்திய சினிமாவில் சிறு வயதில் ஏதோ ஒரு அசம்பாவிதத்தால் பாதிக்கப்படும் கதா நாயகன் Batman, அந்நியன் என்று super hero ஆகி விடுவான். ஆனால் ஐரோப்பிய சினிமாவில் கவனம் முழுவதும் அந்த தனி நபருக்கும் சமூகத்திற்குமான முரண் பாடுகளால் விவரிக்கப்படுகிறது.

400 Blows திரைப்படம் ஒரு உதாரணம். இங்கே பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பு என்று ஆயிரம் நல்ல விஷயங்கள் இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை முறையில் Jacky போல இளவயதில் குரூரமான வன்முறைக்கு ஆளாகும் மனிதன் தனித்து விடப்பட்ட விலங்கு போல ஆகி விடுகிறான். இந்த புறவயமான அமைப்பு ஒரு மனிதனின் மனக்காயங்களை ஆற்ற வழியின்றி இருக்கிறது. Jacky சமூகத்தில் ஒருவனாக வாழ்வதற்கான அத்தனை வழிகளும் அடைக்கப்பட, அவனுக்கு எது விடுதலை அளிக்கும் என்று நினைக்கிறோமோ அதுவே நடக்கிறது.

இயக்குனரின் பெயர், நடிகர்களின் பெயர் என்று இந்த கட்டுரையில் எதையும் சேர்க்கவில்லை. Bullhead cast&crew குறித்து நீங்கள் மேலும் தேடி படிக்கும் அளவுக்கு இது ஒரு முக்கியமான படம் என்பதை மட்டும் இங்கே சொல்கிறேன்.

For More Details - http://www.imdb.com/title/tt1821593/?ref_=nv_sr_1

Saturday 20 August 2016

எந்திரமாதல்!!!



எந்திரமயம் இல்ல எந்திரமாதல்.

'இராணுவ ஒழுங்கு' என்கிற பதம் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. இவர்கள் தான் சர்வாதிகார ஆட்சி வர வேண்டும், புரட்சி வர வேண்டும், Hitler பெருமைகள் எல்லாம் பேசுபவர்கள்.

இராணுவத்தில் பணிபுரிபவர்கள் விடுமுறையில் வரும் போது 'bottle' கேட்டு முதல் ஆளாக நின்று தேச பக்தியை 'prove' செய்வார்கள்.

இது BJP அரசாங்கம் வந்த பிறகு என்று அல்ல எப்போதும் மக்கள் மனதில் இந்த சர்வாதிகார ஆசை ஊறிக்கொண்டே தான் இருக்கிறது.

ஒவ்வொரு வீட்டிலும் சர்வாதிகாரம் இருக்கிறது. 'அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா' என்று அம்மாக்கள் பூச்சாண்டி காட்டி கொண்டிருப்பார்கள். இப்படி வீடுகளில் உள்ள பையன், பெண்கள் தான் மிக எளிதாக திசை மாறி விடுவார்கள்.

பள்ளிகளில் பையன முட்டிக்கு கீழ அடிங்க ஆனா படிக்க வச்சிருங்க என்று சொல்வார்கள். கல்லூரியில் CCTV இருக்கு, பையன்களுடன் பேச விட மாட்டார்கள், பெண்களுக்கு தனி பேருந்து என்று கல்லூரி செல்லும் மகள் மீது நம்பிக்கை இல்லாமல் இந்த வெளி பூச்சு மீது நம்பிக்கை வைத்து கல்லூரிக்கு அனுப்புவார்கள்.

கல்லூரியோ 15 லட்சத்துக்கு CCTV வசதி செய்து இருக்கோம், 2 கோடி ரூபாய்க்கு compound wall அமைத்து இருக்கிறோம் என்று சொல்லி விட்டு, கூடிய சீக்கிரம் Watchman போட போகிறோம் என்பார்கள்.

ஆனால் படிப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்பது போல் ஒரு கோவிலை கட்டி விட்டு அதுக்கு ஒரு பிள்ளையார் அவரை குளிப்பாட்ட ஒரு பூசாரியை வேலைக்கு வைப்பார்கள். கும்பாபிஷேகம் என்று லட்சக்கணக்கில் செலவு செய்வார்கள்.

படிக்க வரும் மாணவர்களிடம் இந்த மாதிரி சட்டை, கால் சட்டை தான் போடணும், Jeans Pant போட கூடாது, சட்டைல design, embroidery இருக்க கூடாது என்று ஆயிரம் condition போடுவார்கள்.

பின்னர் இந்த formal உடை அணிவதை தான் coporate companyகள் விரும்புகின்றன என்று தாங்கள் உருவாக்கிய அசட்டு சட்ட திட்டங்களுக்கு நியாயம் கற்பிப்பார்கள்.

பெண்கள் உடை விசயத்தில் இவர்கள் போடும் conditionயை வைத்து தனி புத்தகம் எழுதலாம். இத்தனைக்கும் Costume துறை ஒன்று கல்லூரியில் இருக்கும். அதன் துறைத்தலைவர் எந்த ரசனையும், சுய சிந்தனையும் இல்லாத அசட்டு பிறவியாக நிர்வாகத்துக்கு சாமரம் வீசி கொண்டிருப்பார்.

From 9am to 4 pm

1. கல்லூரிக்குள் நுழைந்த உடன் பையன் அடையாள அட்டையை அணிய வேண்டும்.

2. அணிகிறான் என்பதை உறுதி செய்ய 2 பேராசிரியர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்.

3. பையன் சட்டைல எல்லா பித்தானும் போட்டு இருக்கான?! கால் சட்டைல் zip இழுத்து விட்டிருக்கானா என்று check செய்வார்கள்.

4. இவர்கள் check செய்கிறார்கள் என்பதை check செய்ய சில அடிபொடிகளும், அதற்கு ஒரு தலைமையும் உண்டு. அவர் CCTV மூலம் கல்லூரியை மேய்த்து கொண்டு இருப்பார்.

5. பையன் முதல் மணி அடிக்கும் முன் வகுப்பிற்குள் நுழைய கூடாது. ஏன்னா???? அது அப்படித்தான்!!!! பிள்ளைக கற்புக்கு பாதுகாப்பு உண்டுன்னு வேற வேற வார்த்தைல சொல்லி தான் ஆள் சேத்து இருக்கிறார்கள்.

5. வகுப்பில் attendance order படி தான் உக்கார வேண்டும்.

6. எந்த break ஆக இருந்தாலும் பையன் வகுப்புல இருக்க கூடாது.

7. தப்பி தவறி பிள்ளைக கிட்ட பேசிட்டா கட்டம் கட்டி, கவுண்டமணி பாத்துட்டான், பாத்துட்டான் என்று ரோட்டில் படுத்து உருளுவது போல உருண்டு ஒப்பாரி வைத்து, ஊரை கூட்டி, ஒழுங்கு நடவடிக்கை என்று ஒரு வாரம் பாடம் நடத்தாமல் சுத்தி கொண்டிருப்பார்கள்.

8. இதற்குள் சாதாரண பின் புலத்தில் இருந்து வரும் பையன்கள் நடை பிணம் போல ஆகி விடுவார்கள்.

9. அவர்களுடைய Confidence level, Personality எல்லாத்தையும் தவறானதாக சொல்லி உடைத்து விடுவார்கள்.

10. இன்னும் சிலர் அடிமை பயிற்சியை கச்சித்தமாக பெறுவார்கள்.

11. சிந்திப்பதற்கான பயிற்சி என்பதே இல்லை என்று ஆன பின் பையனனோ, பெண்ணோ 3 வருசத்துல என்ன படித்துவிடுவார்கள்??!!

12. பேராசிரிய பெருமாட்டிகள் பெரிதாக அலட்டி கொள்வதில்லை. 99% பேர் 'extra income' என்ற நோக்கத்தில் தான் வேலைக்கு வருகின்றனர். Makeup சாமான், சேலை வாங்க, hotel சென்று சாப்பிட என்று இந்த பணத்தை செலவு செய்வார்கள்.

13. நூலகம் என்ற ஒன்றை தான் வாழ்நாளில் பார்த்தே இருக்காத ஒரு நபர் தொலைக்கல்வியில் படித்த பட்டத்துடன் நூலகர் வேலை பார்ப்பார்.

14. மாணவர்களோட படிக்கிற ஆர்வத்துக்கு புத்தகத்திற்கும் இடையில் இவர் இருப்பார்.

15. நில்லுன்னா நிக்கணும், உக்காருணா உக்காரணும் இது தான் இங்கே கல்வி என்னும் பெயரில் கொடுக்கப்படும் பயிற்சி.

16. நாங்க நல்லா coaching, training கொடுப்போம் என்று Circus Company Owner மாதிரி அனைத்து பேராசிரியர்களும் ஒரே தொனியில் பேசுவர்.

17. ஒழுக்கம் தான் முக்கியம், படிப்பு ரெண்டாவது தான் என்பார்கள். Result வந்த பிறகு ஏன் 10 பேர் Arrear வச்சிருக்கான் என்பார்கள்.

18. எங்களுக்கு எண்ணிக்கை முக்கியம் இல்ல என்று சொல்லிவிட்டு பேரசிரியர்களிடம் Admission அதிகரிக்க என்ன பண்ணுனீங்க என்பார்கள்.

19. நான் தான் அடிமை number 1 என்பதை நிரூபிக்கும் விதமாக mike கையில் வந்த உடன், Sir சொன்னார், அய்யா சொன்னாங்க என்று ஒப்பாரி வைப்பார்கள்.

20. அய்யாக்கு தெரிஞ்சா வசவு உரிச்சிருவார் என்று மகிழ்ச்சியாக சொல்வார்கள்.

21. அய்யா வரும் போது யாரும் எதிர்ல போக கூடாது என்பார்கள். அய்யா என்பவர் வெள்ளுடை வேந்தான கல்லூரி முதலாளி, கல்வி வள்ளல் மற்றும் செயலர். (அவரு ரோட்ல போகும் போது எதிர்ல lorry வந்தா என்ன செய்வார்னு யாராவது கேட்டு சொன்னா நல்லா இருக்கும். :-D ;-))

22. கல்லூரி முதல்வர் செயலரின் official துதிபாடி என்பதை பெருமையாக மேடை கிடைக்கும் போது எல்லாம் நிரூபிப்பார்.

23. Committee மேல் committee அமைத்து நீ செய் நீ செய் என்று ஒரு வேலையும் உருப்படியாக செய்ய மாட்டார்கள்.

25. பொது வாசிப்புக்கு புத்தகம் வாங்குவோம் ஒரு 10000 கொடுங்கள் என்றால், பிறகு பார்த்து கொள்ளலாம் என்பார்கள்.

26. Senior faculty, Junior faculty என்று 10000 சம்பளம் வாங்கும் இந்த அல்லக்கை கூட்டம் போடும் நாடகம் அபத்த வகையை சேர்ந்தது.

27. UGC scale of pay வாங்கும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியரை கண்டால் 'அம்மாவ' பார்த்த MLA மாதிரி தண்டால் எடுப்பார்கள்.

28. சுயநிதி பிரிவுகள் இயக்குனர் அவரின் கீழ் இருக்கும் பேராசிரிய புண்ணாக்குகளிடம் அரசு உதவி பெறும் கல்லூரி பேரசிரியர்களிடம் பேசுவதோ, சேர்ந்து தேனீர் அருந்துவதோ, ஒன்றாக ஒண்ணுக்கு போவதோ கூடாது என்று சொல்லி விட்டு, அவர்களை காணும் போது பல்லைக்காட்டுவார்.

29. இயக்குனர் பொழுது போகவில்லை என்றால் 'meeting' போட்டு போன வருசம் போட்ட meetingல் சொன்னதை திரும்ப சொல்வார். அவர் இயக்குனர் ஆன காலத்தில் இருந்து இந்த பாட்டை தான் பாடுகிறார் என்று அவரது அடிப்பொடிகள் சொல்கிறார்கள்.

30. மாணவர் meetingiலும் இதே தான்.

31. இப்படி programme பண்ணி பண்ணி மாணவர்களை, வேலை பார்ப்பவர்களை ஒரு எந்திரமாக மாற்றுவார்கள்.

32. Japanகாரன் robot செய்ய கோடிக்கணக்கில் செலவு செஞ்சு ஆராய்ச்சி பண்ணும் போது இங்கே இந்தியாவில் மனிதர்களை robot ஆக்கும் வித்தையை குறைந்த செலவில் கல்வி நிறுவனங்களும், அதை நிறுவிய கல்வி தந்தைகளும் கண்டு பிடித்து உள்ளார்கள்.

நிற்க.

தன்னிடம் வேலை செய்பவன் எந்த வித மனித உணர்ச்சியில்லாத எந்திரமாக இருக்க வேண்டும் என்பதே முதல் தகுதியாக வைத்து நேர் காணல் நடை பெறும்.

கோபப்படுவது சாணக்கியத்தனம் இல்லை. ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்று சொல்லி வைப்பார்கள். ரௌத்திரம் பழகு என்பது என்றைக்கும் நினைவுக்கு வராது.

நகைச்சுவை உணர்வு என்பது செயலர், முதல்வர், இயக்குனர் சேர்ந்து சிரிக்கும் போது சிரித்து வைப்பது.

நல்ல வேளை இந்த 21ம் நூற்றாண்டு மாணவர்கள் அவர்களாகவே படித்து கொள்ள ஆயிரக்கணக்கான வழிகளை திறந்து விட்டுள்ளது, இல்லாட்டி பட்டம் வாங்குன எந்திரத்தை வச்சி என்ன பண்றது??!!

Saturday 13 August 2016

கதா நாயகனாக ஆவது எப்படி?!



கல்லூரி ஆசிரியராக பணியில் சேர்ந்து 5வது ஆண்டை துவக்கி விட்டேன். கடந்த நான்கு வருடத்தில் மாணவர்களுடன் பழகுவதில் இல்லாத அளவுக்கு ஒரு மனவிலக்கம் தற்போது உருவாகி உள்ளதாக உணர்கிறேன்.

நான் படிப்பதற்கு கல்லூரியில் சேர்ந்த போது எப்படி இருந்தேன் என்று யோசித்து பார்க்கிறேன்.

என்னுடைய பேராசிரியர்கள் என் வயதை அனுபவமாக கொண்டவர்கள். மெத்த படித்தவர்கள். உரையாற்றுவதில் மன்னாதி மன்னர்கள். திருத்தமாக உடை அணிந்து வருபவர்கள். மாணவர்களை கண்ணியமாக நடத்துபவர்கள். பெரும்பாலும் எந்த மாணவனும் அவர்களிடம் வம்பு வைத்து கொள்ள மாட்டான். வம்பு செய்பவனை கவனிக்கும் விதமாக கவனிப்பார்கள்.

இது போக நிர்வாகத்திடம் இருந்து எந்த எடுபிடி வேலையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகதவர்கள். மாணவனை அரவணைத்து வழி காட்டியவர்கள். அவனுக்கு கட்டணம் கட்ட என்று வருடத்திற்கு ஆயிரக்கணக்கான பணத்தை இழந்தவர்கள். வேலை உத்திரவாதத்துடன் அரசாங்க சம்பளம் வாங்கியவர்கள் அதனாலேயே அவர்களால் உலகியல் கவலை இல்லாமல் மாணவர் நலம் கருதி செயல் பட முடிந்தது என்று நம்புகிறேன்.

அவர்கள் ஆசான்கள்.

இந்த 2016ம் ஆண்டில் கல்லூரிக்கு வரும் செம்மறி ஆட்டு கூட்டத்தில் ஒளிந்திருக்கும் வெள்ளாட்டை கண்டு பிடிப்பது சிரமமாக இருக்கிறது. சுயநிதி கல்லூரிகளின் பெருக்கத்திற்கு பிறகு கல்வி சீனாவில் தயாரான பொருள் போல எந்த தரமும், உறுதியும் இல்லாததாக ஆகிவிட்டது.

இங்கே பணியில் சேரும் ஆசிரியர்கள் பெரும்பாலும் இதே கிணற்றை சேர்ந்த தவளையாக இருப்பர். அல்லது இந்த கிணற்று நீரின் நிறம், மனம், சுவை கொண்ட வேறொரு கிணற்று தவளையாக இருப்பர். தப்பி தவறி சில கடல் மீன்கள் உள்ளே வந்து விட்டு முழிப்பதும் உண்டு - என்னைச் சொன்னேன்.

இப்படி கல்லூரிகளில் காசு இருந்தால் கல்வி. இருக்கும் இடங்களை நிரப்புவது ஒன்றே குறிக்கோள். அதுவே கல்லூரியின் வெற்றியின், வளர்ச்சியின் அளவுகோள். கல்லூரி முதலாளியின் கல்லாபெட்டியின் திறவுகோள்.

நன்றாக படிப்பவர்கள், படிக்க கூடியவர்கள், மதிப்பெண் அதிகம் பெற்று அரசு கல்லூரி, அரசு உதவி பெரும் கல்லூரி என்று சென்று விட இங்கே வருபவர்கள் பணம் உள்ள, படிப்பை பற்றி அக்கறை இல்லாத, தடித்தனம் மிகுந்த சில்லுண்டிகள். விதி விலக்குகள் இருக்கலாம் ஆனால் குடும்பத்தின் பொருளாதார நிலை அறிந்து நடந்து கொள்ளும் மாணவர்கள் விரல் விட்டு என்ன கூடிய அளவில் கூட இப்படி கல்லூரிகளில் இல்லை.

9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களை விளையாட்டு, வாசிப்பு, இசை, பயணம், என்று எதிலும் ஈடுபட விடாமல் செய்த பிறகு அவனுக்கு எஞ்சுவது தமிழ் சினிமா மட்டுமே. முடிவு - அசட்டு பிறவியாக கல்லூரியில் வந்து சேருகிறான். அவனை பொறுத்த வரை அவன் பார்த்த குப்பை படத்தில் வந்தது போல தான் கல்லூரி இருக்கும் என்று எண்ணி வருகிறான்.

ஆனால் இங்கே வந்தால் அவனை கதா நாயகனாக ஆக விடாமல் தடுக்க ஆயிரம் தடைகள்.

அவன் என்ன செய்வான்?!

அவனுக்கு வேண்டியது என்ன?!

கதா நாயகன் ஆக வேண்டும்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?!

கோமாளித்தனம், ரவுடித்தனம் செய்ய வேண்டும்!!!

சினிமாவில் அப்படி தான செய்கிறார்கள்?!!

ஜெயமோகனே பெண்களுக்கு ரவுடிகளையும், கோமாளிகளையும் பிடிக்கும் என்று எழுதிய பிறகு மறுத்து பேச என்ன இருக்கிறது?!

கதா நாயக நோய் பீடிக்கப்பட்ட மாணவனை கண்டு பிடிப்பது எப்படி?!

1. உடன் இருக்கும் நண்பர்களை மற்ற பையன்கள், குறிப்பாக பெண்கள் கேட்கும் விதமாக கிண்டல் செய்வான். சில சமயம் அடிப்பான். உடன் இருக்கும் மாணவர்கள் தன்னை சசி குமாராக நினைத்து கொண்டு விட்டது இது நீடிப்பதற்கு காரணம்.

2. எப்போதும் சத்தமாக பேசுவான். இப்போது கிசு கிசுவெனவும் பேசுகிறான். அசட்டுத்தனமாக சிரித்து கொண்டே இருப்பான். முட்டாள், முரட்டு மற்றும் டம்மி piece ஆக நடந்து கொள்வான்.

3. தல அல்லது தளபதியின் வெறியனாக காட்டிக்கொள்வான். இல்லாட்டி cricket பைத்தியம் ஆக இருப்பான்.

4. மலிவு விலை சங்கிலி, மோதிரம், கடிகாரம், கயிறு, (இப்போது இதில் ஜாதி கயிறும் சேர்த்தி) என்று accessories பயன் படுத்துவான்.

5. முகத்தில் முடி உள்ளவன் அதில் கோலம் போடுவான், இல்லாதவன் தலையில். பின்னாடி Ervamatin போன்றவை வெற்றி பெறுவதில் இவர்களின் பங்கு முக்கியமானது.

6. பல வண்ண சட்டை, கால் சட்டை, காலனி என்று அணிந்து வருவான். இவனை கட்டம் கட்ட கல்லூரியில் கைப்புள்ள பேராசிரியர்கள் கிளம்பி வருவார்கள்.

7. பேராசிரியை, அவர் அவன் அம்மா வயதை உடையவராக இருந்தாலும் சீண்டுவது போல பேசுவான். அக்கா வயது என்றால் பிரேமம் கோணத்தில் கற்பனை குதிரையை செலுத்துவான்.

8. இதற்கிடையில் வகுப்பில் இருப்பதிலேயே நிறமான பெண்ணை 'sincere'ஆக காதலிக்க தொடங்கி இருப்பான். இந்த பெண்ணின் கவனத்தை பெறுவதற்கு தலை கீழாக நடக்க கூட தயாராக இருப்பான். அவ்வப்போது நடந்தும் பார்ப்பான்.

9. ஆங்கிலம் அறிந்து கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருப்பான். அதை விட இரண்டு மடங்கு உறுதியுடன் அவன் தமிழ் கற்றது தேர்வு முடிவுகள் வரும் போது தான் தெரியும்.

10. பீடி, சிகரெட், whisky, brandy, கள்ளச்சாராயம் என்று கிடைத்தவற்றை காலி செய்து அனைத்தையும் ஏற்று கொள்ளும் முற்போக்கு எண்ணம் உடைய புரட்சியாளன் என்று காட்டி கொள்வான்.

இந்த அசட்டு பிறவி கதா நாயக மாணவனிடம் ஏதாவது மாணவி் மயங்கினால் அதற்கு கல்லூரி நிர்வாகம் என்ன செய்யும் நியாயமாறே?!!

சரி, அப்போ படிக்கும் போதே கதா நாயகன் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?! அதற்குத்தானே இவ்ளோ நேரம், தூரம், இந்த கட்டுரையை நகர்த்தி கொண்டு வந்தேன்.

இதோ கதா நாயகன் ஆவதற்கு செய்ய வேண்டியவை...

1. வகுப்பு பிடிக்க வில்லை என்றால் நூலகம் செல்ல வேண்டும். நூலகம் பிடிக்க வில்லையா canteen. அங்கே எதுவும் வாங்கி சாப்பிட்டால் அப்புறம் எங்கே போக வேண்டும் என்பது அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

2. தான் குடியிருக்கும் தெருவில் தெருவிளக்கு எரிய வில்லை என்றால் விரிவாக புகார்க்கடிதம் எழுதி உரிய ஆளிடம் சேர்பிக்க வேண்டும். சாக்கடை அடைத்து கொண்டால் குச்சி எடுத்து வந்து தள்ளி, polythene பையை இங்க போடாதீங்க அப்டின்னு advice பண்ணணும்.

3. பேருந்து நடத்துனர் சில்லறை இல்லை என்றாலோ, தர மறுத்தாலோ வண்டியை விட்டு இறங்கி சாலையில் அமர்ந்து போராட வேண்டும். படியில் தொங்குபவர்களை bus மேல் ஏறி பயணம் செய்ய சொல்ல வேண்டும்.

4. நாட்டு நிலவரம் பற்றி ஆசிரியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்து கேட்க வேண்டும் மேலும் கடைசியாக அவர் என்ன புத்தகம் படித்தார் என்று கேட்க வேண்டும்.

5. கதா நாயக நோய்க்கூறு உள்ள மாணவனை திருத்த முயல வேண்டும். அவன் கெட்ட வார்த்தை பேசினால் சிரித்து கொண்டு, நீ என்னைய தூக்கி போட்டு மிதிப்பேன்னு நினைச்சேன், உன் வீரம் இவ்ளோதான என்று சீண்ட வேண்டும்.

6. எல்லாரும் Hitler, Che என்று பேசும் போது புத்தர், இயேசு, காந்தி என்று பேச வேண்டும்.

7. பிறந்த நாள் வந்தால் கடலை மிட்டாய், கருப்பட்டி மிட்டாய், தேன் மிட்டாய், பொறி உருண்டை என்று புது விதமாக கொண்டாட வேண்டும்.

8. டிவியில் கூட யாரும் பார்க்காத படத்தை theater சென்று பார்த்த கதையை திரும்ப திரும்ப சொல்ல வேண்டும்.

9. அப்துல் கலாம் பிறந்த நாளுக்கு எல்லாரும் profile picture மாத்தும் போது கல்லூரிக்கு விடுமுறை எடுத்து அவர் எழுதிய புத்தகத்தை படிக்க வேண்டும்.

10. பீடி, வெள்ளை பீடி, குளிர் பானம், மது பானம் என்று அனைத்தையும் நிராகரிக்க வேண்டும்.

பெண்கள் முன்னவர்களை கிறுக்கன், பொறுக்கி, லூசு, அரைவெட்டு, வெத்து வேட்டு, மொக்கை pieceசு என்றும் பின்னவனை Psycho, பைத்தியம், அவன் கொஞ்சம் ஒரு மாதிரி  என்றும் விளிப்பார்கள்.

இது தெரியாம இந்த பசங்க வாழ்க்கைல 3 வருசத்தை செலவெழுதிட்டு சுத்திட்டு இருப்பான்.

இந்த பகடிகளுக்கு அப்பால்...

இப்போது உள்ள பேராசிரியர்களால் கல்லூரிக்கு புதிதாக வரும் மாணவர்களிடம் கனவுகளை, லட்சியங்களை, கொள்கைகளை, குறிக்கோள்களை விதைக்க முடிய வில்லை.

அவன் சட்டை, கால் சட்டை தலை மயிர் என்று அவனை ஆராய்ந்து விட்டு அவன் புத்தி, உள்ளம், கனவுகள் பற்றி எதுவும் அறிந்து கொள்ள விரும்பாமல் கடந்து சென்று விடுகிறார்கள்.

மாணவர்களுக்கும் முன் மாதிரியாக கொள்ள உதாரண பேராசிரியர்களும் இல்லை. பேராசிரிய புலிகளுக்கும் வேலை உத்திரவாதம், நிறைவான சம்பளம் என்று இல்லை என்று வரும் போது உலகியல் கவலையில் உழன்று கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் சட்டைல பித்தான் இல்லாம வந்தான் என்று சிக்கும்  மாணவனை ஏதோ 9000 கோடி கடன் வாங்கி நாட்டை விட்டு ஓடுனவனை பிடிச்சிட்ட மாதிரி பெருமையாக கருதுகிறார்கள். இப்படி செய்வது தன்னுடைய வேலையை தக்க வைத்து கொள்ள உதவும் என்று நம்புகிறார்கள்.

அதாவது ஆசிரியராக, முன் மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் கலாச்சார காவலர் வேசம் கட்டி ஆடுகிறார்கள். நிலைமை இப்படி இருக்கும் போது எல்லாரும் கைப்பாவை தான் ஆக முடியும் கதா நாயகன் எப்படி ஆக முடியும் அய்யா?!!

என்ன இந்த கட்டுரையில் மாணவிகளை பற்றி ஒன்றும் சொல்லவில்லை?!! என்று நினைத்தால் விதிவிலக்குகள் தவிர்த்து அவர்களின் அசட்டுத்தனம் மாணவர்களுக்கு கொஞ்சமும் குறைந்தது இல்லை என்று சொல்லி முடித்து கொள்கிறேன்.





Saturday 30 July 2016

எங்கே எனது இடம்?!!


'திரைகடல் ஓடியும் திரவியம் தேட' வேண்டிய 24 வயதில் வீடு திரும்புவது என்று முடிவு எடுத்த போது அது மிக சரியான முடிவு என்று ஒரு உள்ளுணர்வு. 4 வருடங்களுக்கு பின்னர் அந்த முடிவு சரிதானா என்ற குழப்பம் என்னை ஆட்டுவிக்கிறது.

Hostel, வேலை செய்யும் போது தங்கிய இடங்களில் தான் மிக்க மகிழ்ச்சியாக, சுதந்திரமாக இருந்திருக்கிறேன் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் வீட்டில் இருந்து வேலை செய்தால் என்ன குறைந்து விடுவோம்?! என்றும், நம்ம சொந்த ஊரில் இருப்பவன் எல்லாம் மனுசன் இல்லையா?!, எதுக்கு வாங்கும் சம்பளத்தில் நான்கில் ஒரு பகுதியை வாடகைக்கு குடுக்க வேண்டும்?! என்று யோசித்து வீட்டுக்கு வந்து விட்டேன்.

இப்பொது சொந்த ஊரில் நண்பர்கள் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லை. எல்லோரும் பொருள் தேடி பறந்து கொண்டிருக்கின்றனர். தீபாவளி, பொங்கல் என்று ஓரிரு நாள் வந்து விட்டு திரும்பி விடுகிறார்கள்.

கல்லூரி படிக்கும் போது நண்பர்கள் வீட்டில் அமர்ந்து மணிக்கணக்காக அரட்டை அடித்து மகிழ்ந்து இருந்தோம். இப்போது நண்பர்களின் வீட்டிற்கு போனால் அவர்களின் அம்மா, அப்பா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிவதில்லை.

 'தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சா?', 'உனக்கு இப்போ சம்பளம் எவ்ளோ தாராங்க?', 'வேற வேலைக்கு முயற்சி பண்ணலையா?', 'சென்னை, கோவைன்னு வேலைக்கு try பண்ண வேண்டியது தான?' 'Professor வேலைக்கு 30 லட்சம் கேக்குறானமே?', இது எல்லாம் தெரிந்த பிறகு இறுதி கேள்வி 'உனக்கு கல்யாணம் எப்போ?'

இப்படி கேள்விகளுக்கு பெரும்பாலும் 'ஆமாம்', 'ஹா ஹா,' என்று சிரித்து சமாளித்து விட்டு வர வேண்டி இருக்கும். கல்யாணத்தை பத்தி கேட்பவர்கள் ஒரு 20 லட்சம் பணம் குடுத்து முதலில் வேலை ஒன்றை விலைக்கு வாங்க உதவினால் நல்லா இருக்கும். இவிங்க கேக்குறாங்க அப்டின்னு கல்யாணம் பண்ணா அப்புறம் நம்ம லட்சியம் என்ன ஆகுறது?!:-D

பணம் சம்பாரிக்க ஆரம்பித்த பிறகு குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தண்ணி அடித்து கொண்டு பேசுவது தான் நல்லா இருக்கும் என்று bar பக்கம் வண்டியை விடுகின்றனர். என்னை போன்ற பச்சை மண்ணுகளெல்லாம் என்ன செய்வதென்று அறியாது விழி பிதுங்கி நிற்கிறோம்!!!

மெட்ராஸ், பெங்களூரு, கோவை, மதுரை போன்ற பெரிய ஊர்களில்,  கடற்கரை, பூங்கா, Mall என்று பொது இடங்கள் நிறைய இருக்கும். அங்கே உலாத்தி கொண்டே கதைக்கலாம். ஆனால் கோவில்பட்டி மாதிரி ஒரு ஊரில் பொது வெளி என்பதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இருக்கும் ஒரு பூங்காவிலும் பாம்புகள் குடியேறி இருக்கும். பெருசுகள் கூடி காரசாரமாக மாலைமுரசு, தினத்தந்தி என்று அரசியல் பேசிக்கொண்டு இருபார்கள்.

கோவில்களில் உண்டியல்களின் எண்ணிக்கை தான் அதிகம் இருக்கிறது. சாமியை தேடத்தான் வேண்டும். இதையும் மீறிய பொது வெளி என்பது 'நவீன பார் வசதி' கொண்ட 'TASMAC' தான். சந்தேகம் இருந்தால் சாயங்காலம் உங்கள் ஊரை கிரிவலம் வாருங்கள். வண்டிகள் எங்கெங்கே அதிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது என்று கவனியுங்கள்.

உறவினர் வீடுகளுக்கு போனாலும் இடைவிடாமல் தொலைக்காட்சி கதறிக்கொண்டிருக்கும். நல்ல நாள் அதுவுமா எல்லா வீட்டிலும் எல்லா பயபுள்ளைகளும் டிவியே கதின்னு தான் கிடக்கிறார்கள்.

படித்த கல்லூரிக்கு போலாம்னா அவிங்க வாசல்ல நிறுத்தி ஆயிரம் கேள்வி கேக்குறாய்ங்க. Alumni meet இருக்கு வான்னு கூப்பிடுவாங்க. வடிவேலுவ ஒரு பொடியன் திட்டி ஓட விட்டு kidneyய எடுத்திட்டு விட்டது கண் முன்னாடி வந்து போகும். பள்ளிக்கூடம் பக்கம் போனால் உடனே donation குடுங்க என்று ஓடி வருவார்கள்.

நண்பனுக்கு கல்யாணம் என்று நண்பர்கள் ஒண்ணு கூடினாலும் முதல் நாள் தண்ணி போட்டு விட்டு ஒரு அணி மல்லாந்து விடும். மண்டபத்தில் loud speaker கதறும். அட அமத்தி போடுங்கன்னா கேக்க மாட்டாய்ங்க. இதுக்கு மேல photo எடுத்து, Selfie எடுத்து FB, Whatsapp group என்று பதிவேற்றுவதில் நேரம் போகும்.

அட படிக்கும் போது அர்த்தமே இல்லாம பேசி அரட்டை அடிச்ச மாதிரி இனிமே நடக்காது போல அப்டின்னு நினைச்சுகிட்டு வீட்டுக்கு கிளம்பிட வேண்டியது தான்.

வீட்டுக்கு வந்தா டிவில அன்னைக்கு பரபரப்பான விசயம், அப்டி எதுவும் இல்லாட்டினாலும் இவிங்களே பரபரப்பா ஆக்கி ஊளை விட்டு, பாருங்க மக்களே பாருங்க என்று ஒப்பாரி வைத்து கொண்டு இருப்பார்கள்.

இந்த டிவிஇறைச்சல் இல்லாம இருக்கிற வீடு எங்கையாவது இருக்கா?!! அப்டி இருந்தா அந்த வீடு வேண்டாம் அது பக்கத்துல உள்ள வீடு வாடகைக்கு கிடைச்சா போதும்.

வேலை பாக்குற இடத்தில தினமும் சொம்பைகளை சமாளித்து விட்டு வீட்டுக்கு வந்தால் டிவியில் வரும் பைத்தியங்கள் போலியாக வியந்து, சிரித்து, கோபப்பட்டு, நெகிழ்ந்து என்று வெறுப்பு ஏத்துவார்கள்.

எதனால தமிழ் சமூகம் இப்படி இறைச்சல் மிகுந்த சமூகமா இருக்கு?!

இதிலிருந்து எப்படி தப்பிப்பது?!!

எதிர்பார்க்கும் அமைதி வீட்டில் இல்லாவிட்டால் வேறு எங்கே போவது?!

ஜெயகாந்தன் எழுதின ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் படித்தது இல்லை ஆனா தலைப்பு மட்டுமே போதுமானதா இருக்கு. இந்த வீட்டிற்குள் உள்ள உலகம் நம் விருப்பப்படி, கனவுப்படி இல்லை என்று தெரிந்த பிறகு வீடு அந்நியமாக ஆகி விடுகிறது.

கூட்டுக்குடும்பம் என்கிற கோட்பாடு, வாழ்க்கை முறை விவசாயம், தொழில் என்று குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏதாவது பொறுப்பு இருந்த போது செல்லுபடி ஆகி இருக்கலாம். அங்கே தனி மனிதன் என்பது இல்லை. குடும்பமாக இணைந்து தான் அனைத்தையும் செய்ய முடியும்.

ஆனால் இந்த 21ம் நூற்றாண்டில்... தனி மனிதன், அவனுடைய கொள்கைகள், லட்சியம், கனவு என்று திட்டமிடும் போது அது இயல்பாகவே குடும்பத்தில் முரண் பாடுகளை கொண்டு வருகிறது. கனவு கண்ட படி வாழ்க்கை வாழ சூழ்நிலை இடம் குடுக்க மறுக்கும் போது சமரசம் கசப்புகளை அளித்து வெறுமையால் உள்ளத்தை நிறப்புகிறது. பின்னர் கூட்டு குடும்பம் என்ன?! கணவன் மனைவி என்று சேர்ந்து வாழ்வதே பெரும்பாடாகி விடுகிறது.

இங்கே கனவு என்பது சிகப்பான மனைவி, குளிரூட்டப்பட்ட அறைகள் கொண்ட வீடு, கார் என்று செட்டில் ஆவது அல்ல.

எனக்கே எனக்கு என்று ஒரு அமைதியான இடம்!!! பக்கத்து வீட்டு டிவி சத்தம் கேக்காத, கோவில் திருவிழான்னு loud speaker கத்தாத, எனக்கு ஓட்டு போடுங்கன்னு சத்தமா பிச்சை கேக்காத, roadல போறவன் வாறவன் சும்மா horn அடிக்காத, பக்கத்துல நாலு மரம், செடின்னு உள்ள ஒரு அமைதியான இடம்.

நண்பர்கள் வந்தால் அமர்ந்து கதைப்பதற்கு, புத்தகம் படிப்பதற்கு, நல்ல திரைப்படத்தை பார்ப்பதற்கு, மென்மையான பாட்டு கேட்பதற்கு, நிம்மதியாக உறங்குவதற்கு, கொஞ்சம் சிந்திப்பதற்கு, கொஞ்சம் எழுதுவதற்கு, இதுக்கெல்லாம் ஒரு இடம்.

நான் கேட்பது அதிகப்பிரசங்கிதனமா இருக்கா?!

இந்த 21ம் நூற்றாண்டுல கூட ஒரு அமைதியான இடத்தை உருவாக்க வாய்ப்பு இல்லையா என்ன?!

எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாய் முடியும் என்று தாயுமானவர் சொன்னதாக ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, மற்றும் கடலுக்கு அப்பால் நாவலில் வரும் கதா பாத்திரங்கள் மீண்டும் மீண்டும் சொல்கின்றன, அது உண்மை தான?!!

கீழ உள்ள மூணு வரி கவிதை மாதிரி தெரியுதா??!! நானே எழுதினேன். :-)

வழி தவறிய எறும்பை போல
நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்
எங்கே என் இடம் என்று!

பி.கு.

தேடுபவன் கண்டடைவான் அப்டின்னு ஜெயமோகன் சொல்லி இருக்கார்.

நல்லா படிங்க...

ஜெயகாந்தன் இல்ல ஜெயமோகன்... ;-)