Thursday, 28 December 2023

The Element Chapter 14 - The Unicorn

The Element 


Chapter 14 - The Unicorn 


20ம் தேதி காலையில் house owner கீழே அவர் bikeஐ start பண்ணும் முயற்சி கேட்டது. நான் கீழே இறங்கி வந்து petrol tank ஐ திறந்து மூடுங்க start ஆகும் என்றேன். அது போல செய்ததும் வண்டி start ஆனது. அவர் ஒரு அடி உயரத்தில் இருந்த நீரில் வண்டியை இறக்கி செலுத்தினார். Parking areaவில் இருந்து நீர் முழுவதும் வடிந்து சகதியாக கிடந்தது.


வெள்ள நீர் parking areaவிற்குள் நுழைந்த போது நான் என்னுடைய bikeஐ பற்றி கவலையே படவில்லை. ஏனென்றால் unicorn வண்டியின் silencer மற்ற வண்டிகளை விட சற்று மேல் நோக்கியே இருக்கும். 


இந்த வண்டி வாங்கியதே மிக நீண்ட பயணங்களை bikeல் செய்ய வேண்டும் என்கிற திட்டத்தோடு தான். வாங்கிய இரு மாதத்தில் ஒரு முறை ஒரே நாளில் கோவில்பட்டியில் இருந்து வள்ளியூர் ராதாபுரம் வரை சென்று விட்டு திரும்பினேன். 250க்கும் மேற்பட்ட kilometre. ஒரு வாரம் முதுகுவலி பின்னி எடுத்து விட்டது. 


அதன் பின் lock down timeல் நானும் மனைவியும் கோவில்பட்டி, திருநெல்வேலி, தூத்துக்குடி என்று முக்கோண பாதையில் இந்த bikeல் shuttle அடித்துக்கொண்டிருந்தோம். கொட்டும் மழையில் எங்கேயும் நிறுத்தாமல் சராசரி வேகத்தில் சென்றிருக்கிறோம். பையன் பிறந்த பிறகு இவை அனைத்தும் மாறிவிட்டது. அவனை முன்னாடி உட்கார வைத்து ஓட்ட எனக்கு பயமாக இருக்கும். அதனால் பெரும்பாலும் அவனை வைத்துக்கொண்டு bikeல் செல்வதை தவிர்ப்பேன். 


18ம் தேதி மீண்டும் மழை கொட்டி வெள்ள நிலை உயரும் என்று செய்தி வந்த பிறகு அன்றிரவு house owner அவர் வண்டி, அவர் மகனின் வண்டி மற்றும் என்னுடைய வண்டி மூன்றிற்கும் plastic bag ஐ வைத்து silencerகுள் தண்ணீர் போகவிடாமல் தடுப்பரண் செய்திருக்கிறார். இதை மறுநாள் காலையில் பார்த்து நமக்கு இது தோணலையே என்று நினைத்தேன். 


20ம் தேதி வண்டியை அவர் வெளியே எடுத்த பின் என்னுடைய வண்டியை வெளியே எடுப்பதற்கு ஏதுவாக நிறுத்தி, தூசு தட்டி வைத்தேன். பையன் பகல் தூக்கம் போடவும் வெளியே சென்று வருகிறேன் என்று மனைவியிடம் சொன்னேன். 


அவள் நான் வாங்கி வர வேண்டிய பொருட்களின் பட்டியலை வாசித்தாள். நான் வெளியே போய்ட்டு வாறேன்னு தான் சொன்னேன் கடைக்கு போய்ட்டு வாறேன்னு சொல்லலை என்று காட்டமாக பதில் சொன்னேன். சொல்லிவிட்டு காய்கறி வாங்கும் பையை எடுத்து வைத்துக்கொண்டேன். 


வண்டியை start செய்து 2 நிமிடம் உறும விட்டேன். Gear போட்டா தான வண்டி போகும் என்றாள். கேட்டை அடைக்க தான் உன்னை கீழ கூட்டி வந்தேன், gear போட இல்லை என்று சொல்லி விட்டு முதல் gearஐ போட்டு வண்டியை நீரில் இறக்கினேன். காலில் நீர் படாமலே bumperல் வைத்துக்கொண்டு தெருவை தாண்டி வெளியே வந்துவிட்டேன். 


எனக்கு சட்டென்று Water World படமும், சமீபத்திய Avatar படமும் நினைவுக்கு வந்தது. மனிதன் தண்ணீர்க்குள்ளேயே வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா? கடலோடியாக இருந்தாலும் வாழ்க்கை மண்ணில் தானே நிகழ முடியும்? 


தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டிற்கு வந்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் நோக்கி செல்ல முயன்றேன். அரை kilometre கூட செல்ல முடியவில்லை. தண்ணீர் குளம் போல தேங்கி இருந்தது. பின்னர் பாளையங்கோட்டை நோக்கி திரும்பினேன். 


தண்ணீர் தேங்கியிருந்தாலும் வண்டியை செலுத்த முடிந்தது. மக்கள் ஒரே சாலையை வருவதற்கும் போவதற்கும் பயன்படுத்தி மாற்றி மாற்றி தண்ணீரை அடித்துக்கொண்டு சென்று கொண்டும், வந்து கொண்டும் இருந்தனர். நாங்கள் வழக்கமாக போகும் bakery, மளிகை கடை எல்லாம் பூட்டிக் கிடந்தது. 


பெரும்பாலும் கடைகளே இல்லை. காய் கறி கடை பகுதியாக shutter போடப்பட்டு, பகுதியாக திறந்து வைத்து மக்கள் queue வில் நின்று காய் வாங்கியதாக காலையில் house owner சொல்லியிருந்தார். எனக்கு queue வில் நிற்க பொறுமையும் இல்லை, queue jump பண்ணும் திறமையும் இல்லை. 


வண்டியை 3ம் mile பாலம் நோக்கி விட்டேன். Median பல இடங்களில் சாய்ந்து கிடந்தது. தள்ளிவிடப்பட்டது போல தான் தெரிந்தது. சாலையில் பல ஆழமான பள்ளங்கள் இருந்தன. பாலத்தில் மாடுகளை நிறுத்தி பால் கறந்துகொண்டிருந்தனர். ஒருவர் என் வண்டியை நிறுத்தி highwaysல் இறக்கி விடமுடியுமா என்று கேட்டார். சரி ஏறிக்கொள்ளுங்கள் என்றேன். 


அவரை இறக்கிவிட்டு Harbour செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்று Fisheries கல்லூரியில் U Turn அடித்து திரும்பினேன். நெல்லைக்கு வாகனங்கள் அனுமதி இல்லை என்று திருப்பி விட்டனர். கோவில்பட்டி செல்லும் பாதை அதாவது தூத்துக்குடி - மதுரை highway கேட்பாரற்று கிடந்தது. 


Bikeல் தனியாக கோவில்பட்டி செல்வதாக இருந்தால் அப்படியே திரும்பி பார்க்காமல் சென்று விடலாம். மனைவி மற்றும் மகனை அவ்வளவு தூரம் bikeல் அழைத்து செல்வது தேவையில்லாத risk. ஊரில் இருந்து வண்டி கொண்டு வந்தால் highways வழியாக வர சொல்வோம் என்று நினைத்துக்கொண்டு திரும்ப வந்தேன். 


உடன் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரை தொடர்பு கொள்ள முயன்று call connect ஆகவே இல்லை. நேரில் சென்று பார்ப்போம் என்று அவர் வீட்டு திசை நோக்கி சென்றேன். வழியில் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். 


பல bikeகுகள் ஒரு mechanic கடை வாசலில் நின்றன. ஒரு Carன் bonnetஐ திறந்து வைத்துக்கொண்டு இரண்டு பேர் காரின் உள்ளே அமர்ந்து சோத்துபொட்டலத்தை பிரித்து கொண்டிருந்தனர். 


மக்கள் முகங்கள் எந்த ஒப்பனையும் இல்லாமல் காணக்கிடைத்தன. கண்களில் இது எப்போது முடியும் என்கிற ஏக்கம் நிறைந்து கிடந்தது. ஒரு குடும்பம் ஆளுக்கு ஒரு பையோடு தேங்கியிருந்த நீருக்குள் இருந்து வந்து மதுரை பதிவு எண் கொண்ட ஒரு 7 seater வண்டியில் ஏறியது.  


மக்கள் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள், மின்சாரம் கிடைக்க இன்னும் இரண்டு நாட்களோ அதற்கு மேலோ கூட ஆகலாம். நகரம் குண்டு விழுந்து சிதைந்தது போல் கிடந்தது. 


நோய்கள் பரவலாம், அத்தியாவசிய பொருட்களுக்கு அடிதடியாகலாம் என்று யோசித்துக்கொண்டே வரும் போதே நான் இது வரை இந்த பகுதிகளில் பார்க்காத பல புதிய முகங்கள் தென்பட்டன. பார்த்தவுடன் சந்தேகத்தை கிளப்பும் முகங்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி குற்றம் புரிபவர்கள் என்று மனதில் ஒரு எண்ணம் எழுந்தது.


நண்பரின் வீட்டிற்கான சாலையில் ஒரு குளம் உருவாகியிருந்தது. என்னை தாண்டி சென்ற ஒருவர் ஆழம் ஜாஸ்தி அப்படி சுத்தி போங்க என்று ஒரு பாதையை காட்டினார். நான் மேற்கொண்டு செல்ல விரும்பாமல் எனது வீட்டை நோக்கி திரும்பினேன். 


இன்று மாலை மின்சாரம் திரும்பும் என்று எந்த உறுதியும் இல்லை. இன்று காலை house owner வீட்டில் இருந்து கொஞ்சம் காய் கறிகள் கொடுத்தனர். தொட்டி தண்ணீர் நாளை காலியாகிவிடும். அதன் பின்னர்? இதற்கு மேல் ஒரு நொடி பொறுக்க முடியாது கோவில்பட்டி கிளம்பிவிடுவோம் என்று வீடு நோக்கி விரைந்தேன். 


The Element. Chapter 13 - The Unperturbed

The Element


Chapter 13 - The Unperturbed


நாங்கள் இந்த சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது குறித்து கொஞ்சம் கூட பதடப்படாத, நிதானத்தை இழக்காத, இதிலிருந்து மீண்டுவிடுவோம் என்று அறிந்த ஒரு நபர் என் அப்பா தான். 


சின்ன பையனை வச்சிக்கிட்டு ரெண்டு பேரும் கஷ்டப்படப்போறாங்க எப்படியாவது போய் கூட்டிட்டு வாங்க என்று என் அம்மா பயந்த போது, முதல் மாடில வீடு, தண்ணி அது வரை உயரலை, 2 நாளைக்கு சமாளிக்க காய்கறி, மளிகை இல்லாமலா இருப்பான்? பாத்துக்கிடலாம் என்று சொல்லி விட்டார். 


எனக்கு 8 வயதிற்கு முன்பே நீச்சல் அடிக்க சொல்லி கொடுத்து அதில் நான் தேரிய பின் முதலில் சொன்ன விஷயம் தெரிஞ்ச ஊரில் பேய்க்கு பயப்படணும், தெரியாத ஊரில் தண்ணிக்கு பயப்படணும் என்பது தான். 


நான் பேய்க்கு பயப்படுறேனோ இல்லையோ, நாய்களுக்கு பயப்படுகிறேன். அது போல நீரில் சிக்கியயவரை காப்பாற்றும் போது பின்னால் இருந்து தலைமுடியை பிடித்து தான் இழுக்க வேண்டும் என்று சொன்னார். 


பள்ளியில் படிக்கும் போது ஒரு முறை swimming poolல் நண்பன் ஒருவன் பரிதவிக்க நான் தண்ணீரில் குதித்து அவனை கைப்பிடியை நோக்கி தள்ள முயற்சித்தேன். அவன் என்னை பிடித்து அமுக்கி விட்டான். நான் அவன் பிடியிலிருந்து நழுவி கீழே ஆழத்துக்கு சென்று அவனுக்கு பின்னால் வழியாக மேலே வந்து முதுகை பிடித்து முன்னால் தள்ளினேன். அதற்குள் மேலே இருந்த ஒரு நண்பன் கையை நீட்ட அவன் கையை இவன் பற்றிக்கொண்டு கரை ஏறினான். 


அதன் பின்னர் பல வருடங்களுக்கு பிறகு ஆற்றில் குளிக்கும் போது கண நொடியில் அடித்துச்செல்லப்படுவதில் இருந்து தப்பித்தேன். அன்றிரவு படுக்கையில் விழுந்து கண்ணை மூடியவுடன் நீரில் அடித்து இழுத்து செல்லப்படும் உணர்வு எழுந்தது. 3 நாட்கள் கழித்தே உடலும் மனமும் அதை மறந்தது.  


அதன் பின்னர் தண்ணீருக்கு பயப்படுகிறேன். தூத்துக்குடியில் இது வரை ஒரு முறை கூட கடல் நீரில் கால் வைத்தது இல்லை. இந்த வெள்ள நீரை சோதித்து பார்க்க மாட்டேன் என்பதை என் அப்பா உள்ளூர அறிந்திருப்பார். 


நான் desktop upsல் 10 நிமிடம் charge போட்டு phoneஐ எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்று அப்பாவிற்கு call செய்தேன். பல முயற்சிகளுக்கு பிறகு connect ஆகி பல முறை இணைப்பு துண்டிக்கப்பட்டது. Private Network bestன்னு சொன்னாங்க இங்க ஒரு phone கூட போக மாட்டேங்கு என்று cell phoneல் tower காட்டுகிறதா இல்லையா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். 


BSNL சுத்தமாக அடி வாங்கிவிட்டது. Powerbank வாங்காமல் அதற்கு பதிலாக ஒரு basic model phone வாங்கி அதில் back up ஆக BSNL number போட்டு வைத்திருந்தேன் அதுவும் கைகொடுகவில்லை. 


நிலைமை தீவிரம் ஆவதாக உணர்ந்தேன். Phoneல் charge தீருவதற்குள் current வருமா என்று தெரியாது. Phone இல்லாமல் யாரிடம் எப்படி தொடர்பு கொண்டு உதவி கேட்பது? 


உள்ளிருந்து வெளியேயும் வெளியே இருந்து உள்ளேயும் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலையில் நமக்கு உதவி தேவை, சிக்கலில் இருக்கிறோம் என்பதை எப்படி வெளியே சொல்வது? Internet இருந்தால் whatsappல் " Save Us" என்று status வைக்கலாம். மின்சாரம், இணையம் இல்லாமல் 100 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்ட உணர்வை தந்த இந்த மழை நாட்களில் எப்படி நாம் இருக்கிறோம் என்பதை உலகுக்கு தெரிவிப்பது? 


19ம் தேதி கடைசியாக call connect ஆன போது phoneல charge எவ்வளவு நேரம் இருக்கும், இனி எப்போ signal கிடைக்கும்னு தெரியலை. என்கிட்ட இருந்து phone வருதோ இல்லையோ 21ம் தேதி சாயங்காலம் ஒரு Bolero இல்ல Sumo யாருகிட்டையாவது சொல்லி கொண்டு வந்திருங்க, இங்க இருந்து கிளம்பிடலாம் என்று சொல்லி முடிக்கும் போது call disconnect ஆகிவிட்டது. 

Wednesday, 27 December 2023

The Element Chapter 12 - The Ankle-Biter

The Element 


Chapter 12 - The Ankle-Biter 


எங்கள் மகனுக்கு 1 வயது 8 மாதம் ஆகிறது. இதில் சரி பாதியை அவன் அவனது அம்மா வழி பாட்டி வீட்டில் தான் கழித்திருக்கிறான். எங்கள் இருவரின் கூட்டு அறிவும், திறமையும் அவனை கவனித்துக்கொள்ள போதாமல் அவனுக்கு உடல் நலம் சீர்கெடும் போது அவர் வந்து இருவரையும் அழைத்து சென்று தேற்றி அனுப்பி விடுவார்கள். 


முழித்திருக்கும் நேரம் முழுவதும் maximum fun பண்ணுவது எப்படி என்பதிலேயே இருப்பான். தெரு முழுதும் வயதிற்கு ஏற்றார் போல் ஆட்களை உறவுமுறை சொல்லி நண்பர்கள் ஆக்கி வைத்திருக்கிறான். இந்த மழை நாட்களில் வீட்டுக்குள்ளே அடைத்து வைக்க வேண்டி இருக்குமே என்ற போது தான் எதிர் வீட்டு குழந்தை அவன் அம்மா மற்றும் சித்தியுடன் வந்தான். 


வீட்டிற்கு வரும் புதிய நபர்களுக்கு முதலில் தன்னுடைய பூனை பொம்மையை மியாவ் என்று சொல்லி அறிமுகம் செய்து வைப்பான். பின்னர் யானை பொம்மை, அதன் பின்னர் Teddy. அதை வைத்து அவர்கள் விளையாட வேண்டும் என்று எதிர்பார்ப்பான். 


அந்த குழந்தைக்கும் அவனுடைய பொம்மையை அறிமுகப்படுத்த விரும்பினான். பின்னர் அது முடியாது என்று தெரிந்த பிறகு குழந்தையின் அம்மாவிற்கும் சித்திக்கும் தாவி விட்டான். 


அவனுடைய தள்ளு வண்டி, cycle ரெண்டையும் எடுத்துக்கொண்டு 8 போட்டு காண்பித்தான். குழந்தை மீது கொண்டு போய் மோதி விடுவான் என்று அது இரண்டையும் மாடியில் கொண்டு போட்டேன். 


சாப்பிடும் போது cocomelon, chu chu tv, chutty kannama, loo loo kids என்று நூறு முறை மாறி வருவான். அன்று அந்த குழந்தை இருந்ததால் அவன் நினைப்பு அங்கே செல்லவில்லை. மேலும் அவன் அம்மாவின் போனில் மிக குறைவான charge தான் மீதி இருந்தது. 


19ம் தேதி காலையில் வெயில் அவ்வளவாக இல்லாததால் பெரும்பாலான முன் பகல் நேரத்தை மொட்டை மாடியில் செலவழித்தோம். அவனுடைய stroller மழையில் கிடந்து நனைந்து ஊறி காய்ந்திருந்தது. அவன் அவனுடைய கை வண்டியை தள்ள நான் stroller ஐ தள்ளி அவனை துரத்த என்று கொஞ்ச நேரம் விளையாடினோம். 


அவனுக்கு காலை உணவாக சப்பாத்தி கொடுக்க மாடிக்கு மனைவி வந்த போது தட்டில் உள்ள சப்பாத்திக்கு 20ற்கும் மேற்பட்ட காக்கைகள் பங்குக்கு வந்தன. இந்த மழைல இவங்களை நியாபகம் வச்சு யாரு சோறு வச்சிருக்க போறா என்றபடி மீதியிருந்த முதல் நாள் சோற்றை எடுத்துவைக்க சொல்லி என்னை பணித்தாள். 


நான் கீழே சென்று எடுத்துக்கொண்டு வந்து வைத்தேன். 10 அடி தூரம் நடந்துவிட்டு திரும்பும் போது ஒரு பருக்கை கூட மிச்சம் இல்லாமல் காணாமல் போயிருந்தது. 


வீட்டிற்குள் மீண்ட போது வழக்கமான நேரத்திற்கு பகல் தூக்கம் போடுவானா என்கிற சந்தேகம் இருந்தது. தொட்டிலில் கிடந்த குழந்தையை சுத்தி சுத்தி வந்தவன் desktopல் இருந்த system upsஐ சென்று on செய்தான். ஆகா இதுல phoneக்கு charge போடலாமேன்னு என்று இதுவரை நினைவுக்கு வரலையே என்று அதை உடனே அணைத்து விட்டு அவனை அங்கிருந்து தூக்கி சென்றேன். 


கொஞ்ச நேரத்தில் குழந்தையின் தாத்தா வர பகல் தூக்கம் போட தொட்டில் ஏறியவன் அவருடன் உரையாடலை தொடங்கி விட்டான். குழந்தையை அவர்கள் மாத்தி மாத்தி கொஞ்சி கொண்டிருந்த போது அவன் அம்மாவிடம் சென்று நீயும் தூக்கு என்பது போல பாவனை செய்தான். இவனை தூக்க சொல்கிறான் என்று நினைத்தால் குழந்தையை தூக்க சொல்லியிருக்கிறான். 


பின்னர் அவர்கள் கிளம்பும் நேரம் கண்டிப்பாக அழுவான் என்பதால் மாடிக்கு தூக்கி சென்று விளையாட்டு காட்டி கொண்டிருந்தேன். 


வீட்டிற்கு திரும்பியவுடன் 3 அறைகளையும் சுற்றி சுற்றி வந்தான். தம்பி, தாத்தா என்று தேடினான். 



The Element Chapter 11 - The Significant Other

The Element 


Chapter 11 - The Significant Other


நான் ஏற்கனவே ஒரு தடவை வெள்ளத்தில் மாட்டிருக்கேன்னு சொன்னேனா என்று என் மனைவி கேட்டாள். ஆமாம் அந்த கதை ஜாதகபொருத்தம் பார்க்கும் போதுலாம் தெரியாதுல என்றேன். 


எங்களுக்கு திருமணம் ஆன நாளில் கோவில்பட்டியில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. எங்கள் மகன் பிறந்த மறு நாள் எலும்பு வரை மழையில் நனைந்து தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினேன். 


ஆனால் இந்த நான்கு வருடத்தில் வீட்டை வெள்ளம் சூழ்ந்தது இதுவே முதல்முறை. இதுவே கடைசி என்று எந்த உத்திரவாதமும் இல்லை. 


UPS வாங்காமல் இருக்க ஏன் இவ்வளவு வியாக்கியானம்? ஒரு AC மாட்டி வச்சா என்ன குறைஞ்சிருவோம் என்று என் மேல் ஆயிரம் புகார்கள் இருக்கிறது. ஆனால் இந்த வெள்ளம் சூழ்ந்த நாளில் அது எதுவும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. மின்சாரம் இல்லாமல் என்ன இருந்து தான் என்ன? என்கிற நினைப்பு வந்திருக்கலாம். 


18ம் தேதி காலையில் தெருவோடு தண்ணீரை சோதித்து கொண்டிருந்த போது இவளும் மகனை தூக்கிக்கொண்டு house owner வீட்டிற்கு compoundற்கு உள்ளாகவே கால் கொலுசு நனையும் அளவு வரை கிடந்த தண்ணீரில் நடந்து சென்றாள். நான் எதுக்கு risk எடுக்கிறே என்றேன். மழைத்தண்ணி ஒன்னும் செய்யாது என்றாள். 


ரெம்ப பயப்படுறீங்க என்று என்னை சீண்டவும் நானும் நீரில் இறங்கி அவர்கள் வீட்டிற்கு சென்றேன். தண்ணீர் ஆற்று நீர் போல சில்லென்று இருந்தது. அவர்கள் வீட்டு வாசலை அடைந்ததும் ஒரு செவிட்டு பாம்பு என்று சொல்லப்படும் புழு நீரில் அடித்துவரப்பட்டு வீட்டிற்குள் ஏற முயற்சி செய்து கொண்டிருந்தது. அதை வெளியே தள்ளிவிட விளக்க மாற்றை எடுத்தால் என் கையில் ஏதோ ஊறி மேலே ஏறியது. கையை உதறினேன். அந்த மாறில் இருந்து டஜன் கரப்பான் பூச்சிகள் அனைத்து திசைகளிலும் பறந்தன. 


அப்போது House Owner வீட்டில் தான் இருந்தார். அவர் விரைவாக வந்து cement பூசும்  கரண்டியை எடுத்து செவிட்டு பூச்சியை நீரில் அமுக்கி பல துண்டுகளாக பிளந்தார். அதை முடித்துவிட்டு அவர் படியேறிய போது அரை அடி நீளத்தில் ஒரு பூரான் வந்தது. என்னடா இது video game மாதிரி level கூட கூட கஷ்டமான உயிரினங்களை கொல்ல வேண்டி வரும் போலையே என்று பார்த்துக்கொண்டிருக்கும் போதே அதையும் பல துண்டுகள் ஆக்கினார். அந்த துண்டுகள் நீரில் வெவ்வேறு திசையில் நீந்தி தன்னுடைய மீதி உடலை தேடின.  


நான் ஒரு நாளைக்கு இவ்ளோ போதும் என்று மனதில் நினைத்துவிட்டு அங்கிருந்து வீடு நோக்கி நடந்தேன். அதற்குள் தண்ணீரின் அளவு சற்று உயர்ந்தது போல் தெரிந்தது. அடுத்த அடி எடுத்து வைக்கும் போது சற்று முன் பார்த்த பூரானை விட கொஞ்சம் சிறியது வேகமாக என் கால் நோக்கி வந்தது. 


நான் அதை கொல்ல எந்த முயற்சியும் எடுத்து கடி வாங்க தயாராக இல்லாததால் அது வந்த திசையில் இருந்து விலகினேன் அது தண்ணீர் அலையில் வேகமாக முன்னே சென்றது. நான் திரும்பி மனைவியிடம் பார்த்து வா பூரான் நிறைய வரும் போல என்றேன். வீட்டிற்குள் நுழைந்தால் படம் ஆரம்பித்த theatre குள் நுழைந்தது போல் இருந்தது. 


ஒரு வாரத்திற்கு முன் தான் எங்கள் மகன் சாமிக்கு பொருத்தி வைத்த விளக்கில் பெருவிரலை சுட்டுக்கொண்டிருந்தான். அதனால் விளக்கு பொருத்தாமல் இருந்தோம். விளக்கை மூட்டை கட்டி எடுத்து வைத்து விடுவோமா என்று கேட்டதற்கு அப்படியே இருக்கட்டும், கொஞ்ச நாள் கழித்து எப்போதும் போல் பொருத்திக்கொள்வோம் என்று சொல்லியிருந்தேன்.  


18ம் தேதி காலையில் இருந்தே வீட்டிற்குள் விளக்கு எரிந்தே ஆகவேண்டிய அளவிற்கு இருள். மாத தொடக்கத்தில் charge போட்டு வைத்த torch light, ஒரே ஒரு பெரிய மெழுகுவர்த்தி தான் இருந்தது. காரத்திகைக்கு வாங்கி மீதியிருந்த விளக்குகளை பொருத்தி வைத்தாள். அகல் விளக்குகளை எடுத்து எண்ணெய் ஊற்றி வீட்டின் நான்கு முலைகளையும் பிரகாசம் ஆக்கினாள். இதனால் வீட்டிற்குள் குளிர் குறைந்தது. 


அந்த 3 மாத குழந்தையின் அம்மா நள்ளிரவில் ஒரு முறை சாப்பிடுவேன் என்று சொல்லியதும் இட்லி பாத்திரத்தை கழுவி மீண்டும் இட்லி அவித்து hot boxல் எடுத்து வைத்தாள். 


House Owner பால் பாக்கெட் கொண்டு வந்து கொடுத்த போது கைமாறு ஏதாவது செய்யவேண்டுமே என்று தோசை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து அவரின் மனைவியிடம் கொடுத்தாள். 


18ம் தேதி இரவு மழை வெறித்த போது நாளை மாலைக்குள் வெள்ளம் வடிந்து விடும் என்றாள். அனுபவம் பேசுது என்று நினைத்துக்கொண்டேன். Signal கிடைக்கும் போதெல்லாம் அவள் அம்மாவிற்கும், அக்காவிற்கும், திருநெல்வேலியில் வெள்ளத்தில்  மாட்டிக்கொண்ட உறவினர்களும் பேசினாள். 


மறுநாள் காலை பொங்கலும் சாம்பாரும் செய்துவிட்டு அன்றிரவவோடு தோசை மாவு தீர்ந்து போகும் மறுநாள் காலையில் என்ன செய்வது என்று இருக்கும் பொருட்களை stock எடுத்தாள். Home Maker என்று சும்மாவா சொல்கிறார்கள்! 


பொங்கலும் சாம்பாரும் செய்த பின் குழந்தையின் வீட்டில் இருந்து எங்கள் ஐவருக்கும் சப்பாத்தி, கிழங்கு குருமா வர இன்று மதியத்துக்கு பொங்கல் தான் என்றாள். அப்பளம், வடகம் என்று பொரித்து வைத்தாள். வீட்டிற்கு புதிய ஆட்கள், உறவினர்கள், நண்பர்கள் வரும் போது மனைவியின் செயல்திறம் பலமடங்கு கூடுவதை ஒவ்வொரு முறையும் அவதானிக்கிறேன். 


19ம் தேதி மதியம் தண்ணீரின் அளவு கீழே போன போது குழந்தையின் தாத்தா அழைத்துப்போக வந்தார். எதுக்கு risk? இன்னைக்கும் இங்க இருக்கட்டும். தண்ணி வடிஞ்ச பிறகு கூட்டிட்டு போங்க என்றாள். 


குழந்தைக்கு எந்த மாசத்தில் எப்படி உணவளிக்க வேண்டும் என்கிற ஆலோசனைகளை அதன் அம்மாவிற்கு அள்ளி வழங்கினாள். 


20ம் தேதி காலை மாடிக்கு சென்று தொட்டியில் தண்ணீரின் அளவை பார்த்துவிட்டு நாளைக்கு வரை கூட சமாளிக்கலாம். இன்னைக்கு சாயங்காலம் current வந்திரும்னு சொல்றாங்க ஆனாலும் நாம sump clean பண்ணாம தண்ணி ஏத்த முடியாது என்ன பண்ணலாம் என்று கேட்டாள். 


அதை நாளைக்கு பாப்போம். இந்த நிமிசம் வரை current இல்லை, phone, internet இல்லைங்கிறது தவிர நாம நல்லா இருக்கோம். இருந்த வீட்டை விட்டுட்டு முகாம்ல நிறைய பேர் இருக்காங்களாம். நமக்கு ரெம்ப கம்மியான கஷ்டம் தான்னு நினைச்சுகிட வேண்டியது தான் என்று சமாளித்து வைத்தேன். 


The Element Chapter 10 - House Owner

The Element 


Chapter 10 - House Owner


நான் இருக்கும் வீட்டின் உரிமையாளர் குறித்து மற்ற நண்பர்களிடம் சொல்லும் போது இவ்வளவு நல்லவங்க ஊருக்குள்ள இருக்காங்களா என்று தான் எதிர்வினை வரும். 


ஒரு உதாரணம். Corona காலத்தில் நாங்கள் அங்கே தங்கவில்லை என்பதால் வாடகை வேண்டாம் என்றார். ஒரு மாதம் வாங்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார். எனக்கு சம்பளம் வருகிறது ஒன்றும் பிரச்சினை இல்லை என்ற போதும் வேண்டவே வேண்டாம் என்று விட்டார். 


அதிகம் படிக்காதவர். வேலை என்று ஒன்று பார்க்க தொடங்கிய காலத்தில் இருந்து ஒரே நிறுவனத்தில் பணிபுரிகிறார். செயல் வீரன். நான் வெள்ள நீருக்குள் கால் வைக்க யோசித்துக்கொண்டிருக்கும் போது அவர் இறங்கி சென்று நாலா புறமும் பார்த்துவிட்டு நிலவரம் என்னவென்று வந்து சொன்னார். 


அவருடைய முதலாளி வீட்டுக்கு பொருட்கள் வாங்க இவர் தான் செல்ல வேண்டும். தண்ணீர் காலை இழுக்கிறது ஆனாலும் போய் தான் ஆக வேண்டும் என்று சொல்லி விட்டு கிளம்பிச் சென்று விட்டார். போகும்போது தெருவில் மிக வரிய நிலைமையில் உள்ள ஒரு முதிய தம்பதிக்கு அவரது மனைவியிடம் சொல்லி உணவளிக்க சொன்னார். 

ஊர் இருந்த நிலைமைக்கு மக்கள் உயிர் பிழைத்து இருப்பதே சாதனை என்பதாக தான் இருந்தது. 


18 அன்று இரவு வரை signal இருந்தது. ஒரு நண்பன் phone செய்து என்ன இருக்கியா, போய்ட்டியா? என்று கேட்டான். அப்படியேதான் இருக்கேன் என்று பேசிக்கொண்டிருந்தேன். இப்போதைக்கு செய்யக்கூடுவது, புத்திசாலித்தனமானது ஒன்றும் செய்யாமல் வீட்டிற்குள் காத்திருப்பது தான் என்று பதிலுரைத்தேன்.  


இப்படி சூழ்நிலைகளில் உதவுகிறேன் பேர்வழி என்று போய் தன் திறன் அறியாமல் உயிர் விட்டவர் பலர். அதனால் கதா நாயகத்துவதுக்கு நேரமோ, விருப்பமோ இல்லை என்று கன்னத்தில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். எங்களுக்கு வழக்கமாக பசும்பால் கொண்டு வரும் அண்ணனால் அன்று வர இயலவில்லை. அப்போது House Owner எங்கேயோ தேடி என் மகனுக்கு ஒரு ஆவின் பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு வந்தார்.

Monday, 25 December 2023

The Element Chapter 9 - Provisions

The Element 


Chapter 9 - Provisions 


Super Market Culture வந்த பிறகு பட்டியல் எழுதிக்கொண்டு போய் மளிகை கடையில் கொடுத்து வாங்கும் பழக்கம் குறைந்திருக்கிறது. அவ்வப்போது வாங்கிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். Offer என்று அள்ளிக்கொண்டு வருபவரும் இருக்கிறார்கள். 


Corona காலத்தில் பொருட்களை வாங்கி பதுக்கும் வேலையை அனைவரும் செய்தனர். வேண்டிய பொருள் கிடைக்கா விட்டால் என்ன செய்வது? அப்படி உயிர் வாழ இன்றியமையாத பொருள் எது? 


Corona காலத்தில் நாங்கள் கிடைத்தவற்றை வாங்கிவைத்துக்கொண்டு

வழக்கமான உணவு போக midday snacks, evening snacks கையிலிருந்த கருப்பட்டி தீரும் வரை சுவையான கருப்பட்டி காஃபி போட்டு குடித்துக்கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு சினிமா பார்த்தோம். Breaking Bad எல்லாம் அப்போது பார்த்தது தான். 


பின்னர் ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்த போது கையில் கொண்டு செல்ல முடிவதை மட்டும் எடுத்துக்கொண்டு கோவில்பட்டி வந்துவிட்டோம். தூத்துக்குடி திரும்ப 3 மாதம் ஆனது. உளுந்து வைத்திருந்த பாத்திரத்தில் வண்டு பறந்து கொண்டிருந்தது. வத்தல், அரிசி, அனைத்திலும் வண்டு, புழு குடியேறியிருந்தது. புதிதாக குடி வந்த போது செய்தது போல மீண்டும் முதலிலிருந்து தொடங்கினோம். 


இது தந்த அனுபவத்தில் ஒரு மாதத்திற்கு மேல் தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைப்பதில்லை. எனது நண்பரின் தந்தையை bus ஏற்றிவிட்டு D Mart சென்ற போதும் மிக குறைவாக வாங்கிக்கொண்டு மாதம் பிறந்த பிறகு மீண்டும் வருவோம் என்று திரும்பி வந்துவிட்டோம். 


மழையால் காய்கள் வாங்கவில்லை, அரிசி, பருப்பு போதும் என்றே நினைத்துக்கொண்டிருந்த போது தான் 3 மாத குழந்தை, அவனின் அம்மா மற்றும் சித்தியோடு எங்கள் வீட்டிற்கு வந்தான். 


அவன் வந்த இரவு மனைவி இட்லி செய்தாள். தோசை மாவும் சீக்கிரம் காலியாக போகிறது என்று நினைத்தேன். மாவுக்கும் பாலுக்கும் இந்த தண்ணிக்குள்ள இறங்க வேண்டி வரும் போலையே என்று வெள்ளத்தை பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தேன். 


மறு நாள் காலை எளிமையா சமையலை முடிப்போம் என்று வெண் பொங்கல் மற்றும் சாம்பார் வைத்தாள். நான் மாடியில் சென்று நின்று வானத்தையும் வெள்ளத்தையும், தெருவில் நடப்பதையும் பார்த்துக்கொண்டு இருந்தேன். மனைவி மாடிக்கு வந்து மெல்லிய குரலில் துவரம் பருப்பு காலி என்று சொன்னாள். 


அப்போது helicopter மேலே வட்டமடித்து கொண்டிருந்தது. நமக்கு ஏதாவது parcel போடுவாங்களா என்று கேட்டாள். இல்லை photo பிடிச்சு TVலயம் News Paperலயும் தான் போடுவாங்க என்றேன். 

 

The Element Chapter 8 - The Magic Bulb

The Element 


Chapter 8 - The Magic Bulb


தமிழ் நாட்டில் 10 முதல் 12 மணி நேரம் மின் வெட்டு இருந்த போது அதை நேரடியாக அனுபவிக்காமல் நான் பாண்டிச்சேரி, பெங்களூர் என்று படிப்பிற்காகவும், வேலைக்காகவும் 2 வருடங்கள் இருந்தேன். 


2012ல் இரண்டு வாரங்கள் சென்னையில் தங்கி வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அந்த நேரத்தில் தான் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் கடலுக்கு எதிர் திசையில் வடிவேலு மாதிரி குறுக்க மண்ணு லாரி வராம பாத்துக்கோ என்று ஓடுவதை பார்த்தேன். 


தமிழகமெங்கும் 12மணி நேர மின் வெட்டு என்றால் சென்னைக்கு மட்டும் 2 மணி நேரம் தான். அதில் ஒரு மணி நேரம் இரவு 1 மணி முதல் 2 மணி வரை. கொசு கொத்தி எடுத்துவிட்டது. அதே ஆண்டு நாங்கள் வீடு கட்டி paint அடிக்கவிட்டாலும் பரவா இல்லை என்று முதலில் வாங்கி வைத்த சாதனம் UPS. 


ஆட்சி மாறியது. தமிழகம் "மின் மிகை மாநிலம்" ஆனது. மின் பராமரிப்பு நாளில் 41/2 மணி நேரத்தில் UPS பல்லிளித்தது. முந்தைய ஆட்சியில் நிலவிய "power holidays" UPS கம்பெனியிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு UPS விற்பனை ஆவதற்கு செய்து கொண்ட ஏற்பாடு தான் என்கிற வதந்தி பரவியது. 


இந்த லஞ்சம் trailer தான். முழு picture இதோ என்று ஒரு பெரிய தொகை சொல்லபட்டு ஒரு ஊழல் வழக்கு வீதிக்கு வந்தது. பின்னர் அது ஒன்றுமில்லாமல் ஆனது. UPS பொருத்திய வீடுகளில் மின் கட்டணம் அதிகம் ஆனது. UPSம் OPSம் ஒன்னு. Main Power போனா வேலை செய்யும்னு jokes forwardல் வந்தது. இந்த UPS தேவை இல்லாத ஆணியோ என்று நினைக்கும் நாளும் வந்தது.


பாண்டிச்சேரி பல்கலைக்கழக விடுதியில் அறைக்கு இரண்டு plug pointல் எப்போதும் power இருக்கும். என்ன இயற்கை சீற்றம் வந்து மின் இணைப்பு போனாலும் அந்த இரண்டு pointல் plug in செய்து cell phone, lap top charge செய்யலாம். ஒவ்வொரு விடுதிக்கும் அப்படி ஒரு UPS setup செய்து வைத்திருந்தார்கள். தமிழக அரசு ஒரு போதும் அப்படி செய்யப்போவதில்லை. 


தூத்துக்குடிக்கு வீடு பார்த்து சென்ற போது வாங்க கூடாது என்று முடிவு செய்த பொருட்களில் UPSம் ஒன்று. அதென்ன ஒரு நாள் மின் வெட்டை கூட பொறுக்க முடியாத வாழ்க்கை. அப்படி என்ன comfort கேட்கிறது என்று ஒரு நினைப்பு. ஆனால் பையன் பிறந்த பிறகு, இந்த மழை வெள்ளத்திற்கு பிறகு அதை reconsider செய்யும் இடத்திற்கு வந்திருக்கிறேன். 


பையன் பிறந்து 5 மாதத்திற்கு பிறகு தான் தூத்துக்குடிக்கு வந்தான். அவன் தவழும் நாட்களில் இரவில் மின் வெட்டு ஏற்பட்டால் phone torch on செய்து விளக்கு பொருத்தி வைப்பதற்குள் பயந்து விடுகிறான் என்பதால் ஒரு back up power உள்ள bulb வாங்கினேன். 


அது full charge இருக்கும் போது மின் இணைப்பு துண்டிக்க பட்டால் 3 மணி நேரம் வெளிச்சம் தரும். என்ன பிரச்சினை என்றால் நாம் switch off செய்தாலும் 3 மணி நேரம் எரிந்து விட்டு தான் அணையும். இது என்ன டா புது design என்று தேவைப்படும் போது எடுத்து பொருத்துவதும் பின்னர் கழட்டி வைப்பதுமாக இருந்தேன். 


பையன் கொஞ்சம் வளர்ந்த பிறகு அந்த bulb வீட்டில் இருப்பதை மறந்தே விட்டேன். எதிர் வீட்டு குழந்தை வீட்டுக்கு வந்த நாளில் அந்த bulb மீண்டும் நினைவுக்கு வந்தது. அதில் எவ்வளவு charge இருக்கிறது என்று தெரியவில்லையே, இருந்தாலும்  எரியவிடுவோம் என்று எடுத்து பொருத்தினேன்.


18ம் தேதி இரவு சமையல் செய்து, உண்டு, பாத்திரம் கழுவி வைப்பது வரை அது எரிந்தது. பின்னர் அவ்வப்போது எரிந்தது. அது எப்படி என்றே தெரியவில்லை. சரி கழட்டி வைப்போம் வேண்டும் போது பொருத்துவோம் என்று எடுத்து வைத்தேன். 


மெழுகுவர்த்தி வெளிச்சமாக இருந்தாலும் நம் கையில் வைத்திருக்கும் போது அறையில் இருக்கும் வெளிச்சத்தை விட தலைக்கு மேலே ஒரு ஓரத்தில் வைத்தால் அறை இன்னும் ஒளிரும் தானே? அதை தான் அந்த bulb செய்தது. 


அந்த சிறிது வெளிச்சம் மழையால் இருண்ட அந்த இரவையும் அடுத்த இரண்டு பகல் மற்றும் இரவுகளையும் கொஞ்சம் தாங்கிக்கொள்ள கூடியதாக மாற்றியிருந்தது.