Tuesday, 22 October 2019

நாடக மேடை


காட்சி 1

கல்லூரி இயக்குனரின் அறை/பகல்/உள்ளே
ஒரு சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய வருடம் தொடங்கி ஒரு வாரத்தில் இயக்குனர் அறையில் ஒரு கூட்டம்.
முதலாமாண்டு மாணவர்கள் கல்லூரியில் நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்ற புகாரை முன்வைத்து இயக்குனரும் அனைத்து துறை தலைவர்களும் விவாதிக்கிறார்கள்.
இயக்குனரின் குளிரூட்ட பட்ட அறையில் அவர் rolling chairல் அமர்ந்து இருக்கிறார். அவருடைய மேசையை சுற்றி இதர துறைத் தலைவர்கள் அமர்ந்து இருக்கின்றனர். இயக்குனரின் வலது பக்கம் மடிக்கணினி ஒன்று இருக்கிறது. இயக்குனரக்கு எதிராக இடது மூலையில் கல்லூரியின் CCTV set up இருக்கிறது. 32 inch LCD TV, அதில் மொத்த கல்லூரியையும் இயக்குனர் கவனித்து கொண்டு இருக்கிறார்.

இயக்குனர்: இந்த HOD meeting எதுக்கு போட்டு இருக்கேனா, நேத்து நம்ம BBA Dept HOD சாக்ரடீஸ் கிட்ட பேசும் போது சொன்னப்பல இந்த மாதிரி IT Dept படிக்கிற பசங்க நாலு பேரு jeans pant போட்டு வந்தாங்களாம், சார் கூப்பிட்டு கேட்டதுக்கு எனக்கு அதை பத்தி ஒண்ணும் தெரியாது, எனக்கும் யாரும் சொல்லலை அப்டின்னு சொல்லிருக்காங்க. Handbookல உள்ள rules and regulations படிச்சு பாக்கலையா அப்டின்னு கேட்டதுக்கு அது Englishல இருக்கு ஒண்ணும் புரியலை அப்டின்னு சொல்லிட்டு போயிருக்காங்க.

அலங்காரநாயகி (ஆடை வடிவமைப்பு மற்றும் அலங்கார துறைத்தலைவி அதாவது Costume Designing and Fashion Technology): Sir, எங்க departmentla நம்ம college rulesஅ strictஅ implement பண்றோம் Sir. நேத்து அந்த நாலு பேருல ரெண்டு பேர் என் கண்ணுல பட்டாங்க, கையோட கூட்டிட்டு போய் officeல fine கட்ட வச்சிட்டேன்.

நல்லசிவம் (வணிகவியல் துறைத்தலைவர்): Sir, இப்ப வந்துட்டு பாத்தீங்கன்னா, Junior Staff எல்லாம் Senior Staffஐ கண்டா wish பண்றதே இல்லை. இந்த rules implement பண்றதுல senior staffக்கு help பண்றதும் இல்லை. Studentsகிட்ட strictஅ பேச பயப்படுறாங்க.

பாரதி தேவி (கணிப்பொறி அறிவியல் துறைத்தலைவி): எங்க departmentல நாங்க எல்லாரும் ladies staff அப்டிங்கிறதால நாங்க பொம்பள பிள்ளைங்க சுடிதார்  shawl 'V shape' வச்சி ஒழுங்கா மடிச்சி போடாட்டி fine வாங்கிட்டு ஒரு apology எழுதி வாங்கிருவோம்.

சகுந்தலா (புள்ளியியல் துறைத்தலைவி): எத்தன வாட்டி சொன்னாலும் lateஅ தான் வாறாங்க, Sir.

சங்கர் (மின்னணுவியல் துறைத்தலைவர்): எங்க departmentல தினம் 10 பேராவது apology எழுதி குடுத்திட்டு தான் இருக்கான்.

தமிழரசி(ஆங்கிலத்துறை தலைவி): நாங்க dress code follow பண்ணாதவங்க கிட்ட class incharge மூலம் fine வாங்குறோம்.

IT துறைத்தலைவி எதை பேசி இந்த பிரச்சினையை திசை திருப்பலாம் என்று அமைதியாக அறையில் உள்ளவர்கள் பேசுவதை நோட்டமிடுகிறார்.

காட்சி 2

கல்லூரி இயக்குனரின் அறை/பகல்/உள்ளே

அலங்கார: Sir, முன்னாடி மாதிரி இல்ல Sir, தினம் ஒரு styleல  முகத்துல தாடி வச்சிட்டு வாறான் Sir. தலைமுடில tail விட்டுட்டு அதை Shirt Collarல ஒளிச்சு வைக்கிறான்.

நல்லசிவம்: எங்க deptல நானே ரெண்டு பேருக்கு தலைல இருந்த tailஅ வெட்டி விட்ருக்கேன்.

சாக்ரடீஸ்: கைல கலர் கலரா band, கயிறு எல்லாம் கட்டிட்டு வாறாங்க. வளையம் போட்டுட்டு வாறாங்க. கழுத்துல வித விதமா சங்கிலி வேற, இதெல்லாம் ஏன் போட்ருக்கேன்னு கேட்டா இதுல என்ன Sir இருக்குன்னு திருப்பி கேள்வி கேக்குறான் Sir.

நல்லசிவம்: சட்டைல மேல உள்ள button கழட்டி விடுறான். ஒரு ஆள் பாத்து சொல்ற வரை அதை மாட்டுறதே இல்லை.

அலங்கார: நம்ம Uniform implement பண்ணலாம் Sir. Engineering, Polytechnic Colleges, ஏன் Govt Arts and Science College கூட Uniform follow பன்றாங்க Sir.

இயக்குனர் (இது வரை நாடியில் கீழ் இரண்டு கையை கோர்த்து அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த இயக்குனர், சிரித்து கொண்டே) : அது ரெம்ப சின்ன பிள்ளைத்தனமா இருக்கும் மேடம். அய்யாவுக்கு ஒரு விருப்பம் இருக்கு, அவரு Schoolக்கு Uniform supply பண்றவங்க நல்ல Professional Model uniform இருக்கு, Collegeக்கு பாக்கறீங்களா அப்டின்னு கேட்டாங்களாம், அய்யா இப்போதைக்கு வேண்டாம்னு சொல்லிட்டாங்க. Lady Staffக்கு Over Coat, Gent Staff எல்லாம் daily White Shirt போட்டா நல்லா இருக்கும்னு அய்யா நினைக்கிறாங்க.

நல்லசிவம்: Sir, பசங்க ஆளும் கட்சி MLA மாதிரி Transparentஅ சட்டை போட்டு வாறாங்க Sir. அவன் உள்ள போட்ருக்க பனியன் கலர் வெளிய தெரியுது. Pocketல கடன் வாங்கியாவது 500 ரூவா தாள் ஒண்ணு வச்சிட்டு வாறான்.

சங்கர்: மறுபடி ஒரு meeting போட்டு studentsக்கு மறுபடி rules and regulations பத்தி சொல்லணும் Sir.

சகுந்தலா: ஆமா Sir.

பாரதி தேவி: ஆமா Sir, Girlsக்கு தனியா, Boys க்கு தனியா meeting போடணும் Sir. First Year பொண்ணுங்க shawlஅ வித விதமா போட்டு வாறாங்க.

சாக்ரடீஸ்: எங்க deptல shawl ஒழுங்கா இல்லாட்டி நானே வெளிய அனுப்பி ஒழுங்கா V shapeல போட்டுட்டு வர சொல்வேன்.

தமிழரசி திரு திரு என்று முழித்து கொண்டு எதை பேசலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறார். எதையாவது பேசி இயக்குனரிடம் பாராட்டு வாங்க வேண்டும் என்ற வெறியுடன் மூளையை கசக்கி கொண்டு இருக்கிறார்.

நல்லசிவம்: Sir, நாலு மணிக்கு college விட்டு வெளிய போன உடனே அவன் கைல phone இருக்கு, எப்படின்னு கேட்டா அண்ணன் வந்து குடுத்தார்னு சொல்றான்.

சாக்ரடீஸ்: வாரம் ஒரு தடவை Cell Phone check பண்ணணும் Sir.

தமிழரசி (பேச விசயம் கிடைத்த மகிழ்ச்சியில்): பொண்ணுங்களை தனியா கூட்டு போய் check பண்ணனும் Sir.

பாரதி தேவி, சகுந்தலா தலையை வேகமா மேலும் கீழுமாக அசைத்து ஆமோதிக்கிறார்கள். IT துறைத் தலைவி notepadல் எழுதுவது போல பாவனை செய்கிறார்.
காட்சி 3

கல்லூரி இயக்குனரின் அறை/பகல்/உள்ளே

சங்கர்: Gent Staffக்கு வேணா வாரத்துல ஒரு நாள் White and White வச்சிக்கலாம் Sir. Principal Sir தினமும் போட்டு வாறார். நாம ஒரு நாள் try பண்ணலாம். அய்யாவும் சந்தோச படுவாங்க.

இது வரை இப்படி ஒருவர் அறையில் இருக்கிறார் என்பது தெரியாத அளவுக்கு இருந்த தமிழ்த்துறை தலைவர் எட்வர்ட் நிமிர்ந்து பார்த்து மனதுக்குள் சிரித்து கொள்கிறார். கல்லூரியில் தமிழ் மொழிப்பாடம் மட்டுமே. இளங்கலை தமிழ் கிடையாது.

Principal மாதம் 1.25 லட்சம் சம்பளம் வாங்கி, driver போட்டு காரில் வந்து போகிறார், அவரு white and white போடலாம், அஞ்சுக்கும் பத்துக்கும் சொம்பு தட்டுற நமக்கு இது தேவையா??!!( சுயநிதி கல்லூரி தமிழ் ஆசிரியரின் Mind Voice)

சாக்ரடீஸ்: பசங்கள இப்பவே coach up பண்ணாட்டி பிறகு வேலைக்கு போற இடத்தில கஷ்டப்படுவான் Sir.

நல்ல சிவம்: சட்டைல pocket மேல, முதுகுல எல்லாம் என்னென்னமோ எழுதிருக்கு. ஒழுங்கா plain கலர் shirt and pant இல்லாட்டி decentஅ checked இந்த மாதிரி போட்டு வர சொல்லணும். Socrates sir சொல்ற மாதிரி இப்பவே training கொடுக்கணும். அப்போ தான் interviewக்கு போகும் போது ஒழுங்கா dress பண்ணிட்டு போவான்.

தமிழரசி: நாங்களும் final year studentsக்கு Spoken English training குடுத்திட்டு தான் Sir இருக்கோம்.

நல்லசிவம்: அப்புறம் யார் phone கொண்டு வந்து மாட்டுனாலும் முதல்ல அவன் FB, Whatsapp எல்லாத்தையும் check பண்ணனும் Sir.

பாரதி தேவி: அடுத்த தடவை handbookல நம்ம college students social networking use பண்ணக்கூடாதுன்னு ஒரு rule add பண்ணனும் Sir.

சாக்ரடீஸ்: CCTV cover பண்ணாத இடமா பார்த்து அங்க போய் வாயில hans வச்சிட்டு வாறான் அதனால பசங்க கூடுற எல்லா இடத்தையும் CCTV கண்காணிப்புல கொண்டு வரணும் Sir.

நல்லசிவம்: Bath roomல அசிங்க அசிங்கமா எழுதி வைக்கிறான், அங்க ஒரு camera சும்மா வச்சாலும் போதும் இதெல்லலாம் குறைஞ்சிரும் Sir.

சாக்ரடீஸ்: Classல கூட மாட்டலாம் Sir, benchல தல, தளபதின்னு எழுதி வைக்கிறான்.

பாரதி தேவி: பிள்ளைங்களும் எழுதுறாங்க.

சங்கர்: Students meeting போட்ட கையோட Junior Staffக்கு ஒரு meeting போட்டு management போடுற rulesக்கு co operate பண்ணி தான் ஆகணும் அப்டின்னு சொல்லணும்.

காட்சி 4

கல்லூரி இயக்குனரின் அறை/பகல்/உள்ளே

இயக்குனர்: இப்ப வார பசங்களுக்கு நம்ம college ஓட அருமை தெரியல. அவங்களுக்கு நீங்க எடுத்து சொல்லுங்க. நம்ம college ஓட பாரம்பரியம், நம்ம செயலர் அய்யா எவ்வளவு முக்கியமான ஆளு. அவரு எந்த அளவுக்கு punctual, disciplined அப்டின்னு அவங்களுக்கு சொல்லி புரிய வைங்க.

தமிழரசி: கண்டிப்பா Sir.

சகுந்தலா: அப்ப இன்னைக்கு மதியமே meeting போட்டு சொல்லிடலாமா Sir?!

இயக்குனர்: போட்டு சொல்லுங்க மேடம்.

நல்லசிவம்: பசங்களுக்கும் கையோட meeting போட்டு சொல்லிடுறோம் Sir.

இயக்குனர்: செய்ங்க சார்.

சாக்ரடீஸ்: Dress Code follow பண்ணாட்டி first time warning, second time fine, third time Suspend பண்ணுவோம்ன்னு சொல்லுறோம் Sir.

இயக்குனர்: பண்ணுங்க சார், நாளப்பின்ன வேலைக்கு போற இடத்துல எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டிட்டு வேலை பாக்க போறான், அத இப்ப இருந்து செய்யிறதுல என்ன பிரச்சினை?!! Management theoryல பாத்தீங்கன்னா எல்லாரையும் திருப்தி படுத்த முடியாதுன்னு சொல்வாங்க ஆனா முயற்சி பண்ணி பாக்குறதுல என்ன தப்பு?!! ஒரு complacency, satisfaction வந்திருச்சுன்னா அப்புறம் growth இருக்காது அதனால தொடர்ந்து Work பண்ணிக்கிட்டே இருக்கணும். கீழ்ப்படிய கற்றுக்கொள் தலைமைப்பதவி தேடி வரும்ன்னு விவேகானந்தர் சொல்லி இருக்கார். அதெல்லாம் இந்த பசங்களுக்கு புரிய வைக்கணும்.

எல்லோரும் தலையை மேலும் கீழுமாக அசைத்து ஆமோதிக்கிறார்கள்.

காட்சி 5

கல்லூரி இயக்குனரின் அறை/பகல்/உள்ளே

இயக்குனர்: நீங்க எதுவும் சொல்ல போறீங்களா, மாலதி மேடம்.

மாலதி (Office Superintendent aka கங்காணி): சார், நிறையா staff attendanceல மாத்தி மாத்தி கையெழுத்து போடுறாங்க, officeல இருந்து intercomல கூப்பிட்டு ஒரு வேலை சொன்னா response பண்ண நேரம் ஆகுது. Junior Staff ஒருத்தரும் ஒழுங்கா ஒரு வேலையும் செய்ய மாட்டேங்காங்க.

இயக்குனர்: இன்னைக்கு எல்லாத்துக்கும் meeting போட்டு ஒரு முடிவு பண்ணிடுங்க. அப்புறம் junior staff எல்லார்கிட்டயும் opposite gender  students கிட்ட  கொஞ்சம் பார்த்து பழக சொல்லுங்க. Classroom தவிர்த்து என்ன பேசனும்னாலும் துறையில வச்சி தான் பேசணும்னு சொல்லுங்க.

                    ***The End***

Monday, 21 October 2019

Lady Bird - Girlhood

இன்னைக்கு பாக்க போற படத்தோட பேரு Lady Bird.

இது ஒரு coming of age film. இப்படி படங்கள் Higher Secondary படிக்கிற 15ல இருந்து 17, 18 வயசு பசங்க, பொண்ணுங்களை பத்தின கதையா இருக்கும். படத்தோட ஆரம்பத்துல ரெம்ப emotionalஅ எல்லாத்தையும் handle பண்ற characters படம் முடியும் போது ஒரு maturity க்கு வந்திருப்பாங்க.

நாம அவங்களோட emotional மற்றும் spiritual growthஅ தான் திரைல பாக்குறேம். Life of Pi, Dead Poets Society அப்புறம் 400 Blows (அப்பாவோட type writer அ திருடி விக்கிறதுக்கு கொண்டு போவானே?! அந்த படம்) Coming of age genreல வரும்.

Hollywoodல ஒவ்வொரு வருசமும் coming of age genre ல ஒரு 5 படமாவது வரும். தமிழ்ல துள்ளுவதோ இளமை அப்படி ஒரு படம். ஆனா தமிழ்ல higher secondary, college படிக்கிற பசங்களை வச்சு எடுக்கிற படம் பெரும்பாலும் சொதப்பிடும். எனக்கு வேற ஒரு தமிழ் படமும் நியாபகத்துல இல்ல.

இங்க Lady Bird படத்துல school முடிச்சு அடுத்து எந்த college க்கு படிக்க போறது அப்டிங்கிறத அம்மா, அப்பா கூட discuss பண்ணிட்டு இருக்கிற ஒரு பொண்ணு Christine. 14 வயசுல இருந்து college படிச்சு முடிக்கிற வரைக்கும் ரெம்ப உணர்ச்சிகரமா எல்லாத்தையும் பாக்க கூடிய வயசு. அந்த வயசுல அதுவும் school முடிக்க இன்னும் கொஞ்ச காலமே இருக்கும் சூழ்நிலைல Christine என்னலாம் பன்றாங்க அப்டிங்கிறத தான் படம்.

இந்த வயசுல தான் நமக்குன்னு ஒரு அடையாளம் தேவைப்படுது. வீட்டுல வச்ச பேரு போதாமல் நாமளே நமக்கு பேர் வைப்போம். இல்ல friends கூட சேர்ந்து seven stars, naughty, sweety girlsன்னு பேர் வச்சு பைத்தியம் மாதிரி ஏதாவது பண்ணிட்டு இருப்போம். இதெல்லாம் part of growing up.

இங்க Christine அவங்களுக்கு அவங்களே "Lady Bird" ன்னு பேர் வச்சுக்கிறாங்க. School election ல நிக்கிறாங்க, culturalsன்னு சொல்லி drama ல participate பன்றாங்க, friends கூட சண்டை போடுறாங்க, அப்புறம் சேர்ந்துகிறாங்க, harmless பொய்கள் சொல்றாங்க. எல்லாரும் அவங்களை Lady Bird னு தான் கூப்பிடனும்னு condition போடுறாங்க.

பொண்ணு இப்படி நடந்துகிடும் போது அந்த பொண்ணோட அம்மா அதை எப்படி handle பன்றாங்க, அவங்க அப்பா என்ன மாதிரி யோசனை சொல்றாங்க, அண்ணன் என்ன நினைக்கிறான், அப்புறம் தோழிகள் reaction என்னன்னு ஒரு perfect coming of age film.

இந்த படத்தோட director ஒரு பெண். பேரு Greta Gerwig. அவங்களோட சொந்த வாழ்க்கைல நடந்ததை கொஞ்சம் கற்பனை கலந்து எழுதி எடுத்திருக்காங்கன்னு படிச்சேன்.

இங்கே சொல்ற படத்தை எல்லாம் நீங்க பாக்க நேரம், சூழ்நிலை இருக்கான்னு தெரியலை. ஆனா நாம ஒரு படத்தை பத்தி கேள்விப்பட்டு அதை பாக்கணும்னு நினைச்சுட்டே இருந்தோம்னா கண்டிப்பா ஒரு நாள் பாத்திடுவோம்.

Okja - Broiler உலகம்

எப்போதும் சின்ன பிள்ளைங்களை வச்சு எடுக்கிற படங்கள்ல ஒன்னு அந்த குழந்தை தொலைஞ்சு போய்டும் இல்ல அந்த குழந்தைக்கு பிடிச்ச பொருள் தொலைஞ்சு போய்டும், அந்த குழந்தை அதோட உறவினர்கள், நண்பர்கள் கிட்ட இருந்து பிரிஞ்சு போய்டும் அப்புறம் ஒரு பெரிய சாகசத்துக்கு பிறகு திருப்பி எல்லாரும் ஒன்னு சேர்ந்திடுவாங்க.

யதார்த்தத்துக்கு பக்கத்துல இருந்தா அது Iran படாம இருக்கும். Children of Heaven, Where is My Friend's Home? The Song of Sparrows மாதிரி. Rabbit Proof Fence - 3 பிள்ளைங்க அடைச்சு வச்ச முகாம்ல இருந்து தப்பிச்சு நடந்தே ஊருக்கு வருவாங்களே?- மாதிரி உண்மை கதையையும் படமா எடுப்பாங்க.

Okja கொரியாவை சேர்ந்த இயக்குனர் எடுத்த Hollywood படம். படம் பாதிக்கு பாதி கொரியா மற்றும் USAல நடக்கிற மாதிரி கதை.

இப்போ நாம broiler கோழிக்கறி நிறைய சாப்பிடுறோம். இந்த பழக்கம் எப்படி இந்த சமூகத்துல உருவாச்சு? என்னைக்காவது கறி சாப்பிடுற பழக்கத்தை வார வாரம்னு மாத்தினதுல இந்த broiler கோழிக்கு முக்கிய பங்கு இருக்கு. Broiler கோழி யாரும் வீட்டுல வளர்க்கிறது கிடையாது. அதை தொழிற்சாலை மாதிரி வச்சு கறிக்காக மட்டுமே வளர்க்கிறாங்க. இந்தியா மாதிரி நாட்டுல broiler கோழினா வெளிநாடுகள்ல என்ன விலங்காக இருந்தாலும் சாப்பிடுவாங்க.

மக்கள்கிட்ட நீங்க சாப்பிடுறது ஆரோக்கியமான, செயற்கை உரம் எதுவும் கலக்காமல் விளைவிக்கப்பட்ட காய்கறினா வாங்குவார்கள் தானே?! அதே மாதிரி நாட்டுக்கோழி, மீன் வளர்ப்பு தொழில்லாம் நடக்குது. ஆனா வெள்ளைக்காரங்க கொஞ்ச விவகாரம் ஆனவங்க. பெரிய லாபம் பாக்க நினைக்கிற பேராசை பிடிச்சவங்க.

நீர் யானை, பன்றியோட gene, DNA லாம் கலந்து ஒரு புது வகையான பன்றியை உருவாக்குறாங்க. அப்படி உருவாக்கபட்ட 15 பன்றிகளை உலகத்துல 15 வேறு வேற நாட்டுல உள்ள குடும்பங்கள்கிட்ட குடுக்குறாங்க. அவங்க கிட்ட அந்த பன்றி 10 வருசம் இயற்கையான சூழ்நிலைல வளரும். அதுக்கு பிறகு அதுல best பன்றியை தேர்ந்தெடுத்து கறி போட்ருவாங்க.

இதுல ஒரு பன்றி கொரியால உள்ள ஒரு குடும்பத்துகிட்ட வருது. அங்க இருக்கிற ஒரு பாப்பா அந்த பன்றியை பாத்துக்கிறா. பன்றிக்கு Okja ன்னு பேர் வைக்குறா. இதுவும் கிட்ட தட்ட ET மாதிரி ஒரு கதை தான். ஆனா அந்த பாப்பாவுக்கு பன்றியை கறிக்கு கொண்டு போயிடுவாங்க அப்டிங்கிறது தெரியாது.

நம்ம ஊர்ல நடந்த ஈமு கோழி மோசடிலாம் நியாபகம் இருக்கா?! பிரபலமானவங்க பலர் ஈமு கோழி வியாபாரத்துக்கு விளம்பரம் பண்ணிருக்காங்க. இங்க அந்த மாதிரி பிரபலங்களை வச்சு 10 வருசம் ஒரு reality show மாதிரி இந்த பன்றிகளோட வளர்ச்சியை cover பண்ணி மக்கள் கிட்ட நீங்கள் சாப்பிட ஆரோக்கியமான கறி உருவாகுதுன்னு காட்டுறாங்க. ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குறாங்க.

ஆனா இப்படி விளம்பரத்துக்கு பின்னாடி யதார்த்தம் வேறயா தானா இருக்கும்? அந்த யதார்த்தம் என்ன? நாம நம்ம சாப்பாடு பத்தி எந்த அளவுக்கு அக்கரையோட இருக்கோம்? மனிதன் விலங்கு மேல வைக்குற அன்பு என்ன மாதிரி இருக்கும்?

ஒரு Typical Hollywood படம் மாதிரி இருந்தாலும் சுற்றுப்புறம் சார்ந்து கவனிக்கப்படாம போற விஷயங்களை இந்த படம் காட்டுது. கண்டிப்பா friends கூட உட்கார்ந்து theatre பாக்க வேண்டிய படம். ஆனா நமக்கு வேறென்ன மார்க்கம்? Computer ல பாக்க வேண்டியது தான்.

Sunday, 20 October 2019

Article 15 - இரண்டு இந்தியாக்கள்


India is two countries in one: an India of Light, and an India of Darkness. The ocean brings light to my country. Every place on the map of India near the ocean is well off. But the river brings darkness to India—the black river.

- The White Tiger, Aravind Adiga

The White Tiger நாவலின் மைய கதா பாத்திரம் India of light and India of darkness என்று இரண்டு விதமான இந்தியாக்கள் இருப்பதாக அடிக்கடி சொல்லும். Article 15 படத்தின் முதல் பத்து நிமிடத்திலேயே  இப்படம் அந்த இரண்டு விதமான இந்தியாக்களை பற்றியதாக தான் இருக்கப்போகிறது என்று ஒரு உள்ளுணர்வு.

படத்தின் முதல் காட்சியில் கிராமத்தினர் கூடி பாடிக்கொண்டிருக்கின்றனர். மழை பெய்து கொண்டிருக்கிறது. Rashomonனில் பெய்வது போன்ற மழை. பாடல் வரிகள் கூர்மையாக இருக்கின்றன. நான் உண்மையை சொல்வேன், சொன்னால் உனக்கு வலிக்கும் என்பதாக. பணக்காரர்கள் சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்கிறார்கள் நாங்கள் அசுத்தமான நீரை குடிக்கிறோம் என்று பாடலில் குடிதண்ணீரின் தரத்தில் இருக்கும் அரசியலை பாடுகிறார்கள். குடிசைகள், சகதி, பன்றிகள் என்று அவர்கள் வாழ்விடம், சுற்றுப்புறத்தை கேமரா சுற்றி வருகிறது.

முதல் காட்சியின் இடைவெட்டாக மழையின் ஊடே செல்லும் ஒரு வேனில் 3 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை சில நொடிகள் காட்டிவிட்டு மீண்டும் கிராமத்திற்கு திரும்பிவிடுகிறது.

இப்போது கதா நாயகன் அறிமுகம்.பின்னணியில் ஆங்கில பாடல் ஒன்று ஒலிக்கிறது. பறவைக்கோண காட்சியாக சுங்கம் வாங்கும் நவீன நாற்கர இந்திய சாலையில் வெள்ளை நிற Bolero கார் விரைகிறது. காரின் உள்ளே Ayan Ranjan. உத்திர பிரதேசத்தில் உள்ள Laalgaon மாவட்டத்திற்கு புதிய Additonal Commissioner ஆக பொறுப்பேற்க சென்று கொண்டிருக்கிறான். அவன் அருகே Nehru எழுதிய The Discovery of India புத்தகம்.

காரின் ஓட்டுனர் ராமர் பற்றிய ஒரு கதையை சொல்கிறார். ராமர் வனவாசம் முடிந்து திரும்பும் போது அனைத்து ஊர்களும் விளக்கேற்றி வைத்திருந்தன. ஆனால் ஒரு கிராமம் மட்டும் இருளில் இருந்தது. ராமர் அங்கு சென்று ஏன் இருளில் இருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அவர்கள் விளக்கேற்றி வைத்திருந்தாகவும் காற்றில் அணைந்து விட்டதாகவும் சொல்கின்றனர். அவர்கள் இருளில் இருக்கும் போது ராமரின் மாளிகை நன்றாக ஜொலிப்பதை காணமுடிவதால் மீண்டும் விளக்கேற்றவில்லை என்கின்றனர். India of light and India of Darkness.

Ayan Ranjan காதலிக்கு கிராமப்புற இந்தியா அழகாக இருப்பதாக குறுந்செய்தி அனுப்புகிறான். தண்ணீர் வாங்க வண்டியை நிறுத்த சொல்கிறான். ஓட்டுனர் அது தாழ்த்த பட்ட மக்கள் வாழும் கிராமம் என்றும் அவர்களின் நிழல் கூட நம்மீது விழக்கூடாது என்றும் கூறுகிறார். அவர்கள் தொட்ட தண்ணீரை எப்படி குடிப்பது என்று கேட்கிறார். இதைப்பொருட்படுத்தாத Ranjan தண்ணீர் வாங்க சொல்லி பணத்தை கொடுத்து விட்டு வண்டியை விட்டு இறங்குகிறான். அங்கே கடைக்கு வெளியே சிலர் பெஞ்சில் அமர்ந்து இருக்கிறார்கள். சிலர் செருப்பை தனியே வைத்து விட்டு  குத்தவைத்து உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் தன்னை வெள்ளைக்கார துரை திரும்ப வந்து விட்டது போல் பார்க்கிறார்கள் என்று காதலிக்கு சொல்கிறான்.

அலுவலகத்தை நெருங்கும் போது ஒரு பெரிய கட்டிட வேலை நடப்பதை பார்க்கிறான். Multiplexஅ என்கிறான். இல்லை சாமியாரின் ஆசிரமம் என்று சொல்கிறார்கள்.

அலுவலகத்தை அடைந்த பின்னர் அங்கு உள்ள Inspector, சக அதிகாரி, ஊழியர்களை அறிமுக படுத்துகிறார். முதலில் தன்னுடைய முதல் பெயரை (First Name) சொல்லும் அவர் பின்னர் தன்னுடைய ஜாதியை குறிக்கும் பெயரை (Title Name) சேர்த்து சொல்கிறார்.

தமிழ் நாடு தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் இந்த பழக்கம் இருக்கிறது. Gowda, Rao, Thackeray, Gehlot, Modi, Banerjee, Sarkar, Shah, Sharma, Gupta என்பதெல்லாம் ஜாதிப்பெயர் அல்ல. அவை Title Name தான். ஆனால் அதைவைத்து அவர் இன்ன ஜாதி என்பதை எளிதாக யூகித்து கொள்ளலாம்.

அலுவலகத்தில் உள்ள அனைவரும் Jai Hind என்று சொல்லி தான் வணக்கம் வைத்து தங்கள் பெயரை சொல்கின்றனர். Title Nameஉடன் சேர்த்து தான். அப்போது உள்ளூர் contractor Anshu Nagaria Ranjanனின் பின்னால் நின்று கொண்டே காலை தொட்டு கும்பிடுகிறான். Inspector Brahmadatt அவனை அறிமுக படுத்துகிறார். அதாவது 'யார் இங்கே வேலைக்கு வந்தாலும் எங்களை adjust செய்து கொண்டு தான் போக வேணும்' என்பதாக அவன் பார்வை இருக்கிறது.

அன்றிரவு ரஞ்சனை வரவேற்கும் விதமாக பார்ட்டி நடக்கிறது. அதில் ரஞ்சன் என்ன வகை மது அருந்துவான் என்று அவர்கள் facebook மற்றும் Instagram post மூலம் அறிந்து கொண்டதாக சொல்கிறார்கள். எதனால் Laalgaon posting என்று உயரதிகாரி கேட்க அது punishment posting என்று சொல்கிறான்.

பயிற்சி முடிந்து Home Ministerஉடன் நடந்த சந்திப்பில் ரஞ்சன் அமைச்சருடன் பேசும் போது Okay Sir, Yes, Sir என்று சொல்வதற்கு பதிலாக cool, sir என்று சொன்னதால் இங்கே அனுப்பி விட்டதாக சொல்கிறான்.

மது அருந்தும் போது சக ஊழியர்கள் அவர்களுடைய தட்டில் இருந்து ரஞ்சன் எதையும் எடுக்க வேண்டாம் என்று புதிய தட்டு ஒன்றில் ரஞ்சனுக்கு பண்டங்களை எடுத்து வருகின்றனர். ரஞ்சன் உயர்குடி பிராமணன். அவர்கள் தாழ்த்த பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். அவர்கள் தட்டில் ரஞ்சன் எடுப்பது ரஞ்சனுக்கு கவுரவம் அல்ல என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

விருந்து நடக்கும் இடத்திற்கு  கிராமத்தினர் புகார் கொடுக்க வருகின்றனர். Inspector அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் நாளை பார்க்கலாம் என்று சொல்கிறார். மற்றுமொரு அதிகாரி அந்த கிராமத்தில் இது சகஜம் என்று சொல்கிறார். அது தோல் பதனிடும் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் கிராமம். படத்தின் முதல் காட்சியில் வந்த கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்த மூன்று பெண்களை காணவில்லை. அந்த கிராமத்து பெண்கள், ஆண்கள் ஓடிப்போவது, திரும்ப வருவது எல்லாம் அன்றாடம் என்பதாக போலீசாரின் பார்வை இருக்கிறது.

தலித் தலைவர் ஆட்சியில் இருக்கும் போது அவருக்கு அவரே சிலை வைத்து கொள்வதில் நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து விட்டு போய் விட்டார். இப்போது ஆட்சியில் இல்லை என்றவுடன் தலித்துகள் ஒடுக்கப்படுவதாக ஒப்பாரி வைக்கிறார் என்று Inspector கிண்டல் செய்கிறார்.

தனது கல்லூரி கால நண்பன் தான் வேலைக்கு வந்த ஊரில் இருப்பதை காணும் ரஞ்சன் அவன் போதையில் இருப்பதைக் கண்டு அவனை வீட்டில் சென்று விடுவதாக அவனுடைய வண்டியை வாங்கி ஓட்டுகிறான். வழியில் கத்தியோடு ஒருவன் இன்னொருவனை துரத்தி வருவதை பார்க்கிறான். ரஞ்சனின் பாதுகாப்புக்கு வந்த கான்ஸ்டபிள் கத்தி வைத்திருந்தவனை கன்னத்தில் அடித்து உக்கி போட வைக்கிறார். மிட்டாய் கடைக்காரர் மகன் தான் என்று கத்தியை வாங்கி விட்டு அனுப்பி விடுகிறார்.

ரஞ்சனின் நண்பன் ரஞ்சனின் வாழ்க்கையை பற்றி கேட்கிறான். காதலியை பற்றி கேட்கிறான். அவளைப்போல் பெண் கிடைக்க மாட்டாள் அவளை இழந்து விடாதே என்கிறான். காதலி Gender Equality, Women Empowerment பற்றி எழுதுவதாகவும் தங்களுக்குள் உரையாடலை விட வாக்குவாதம் அதிகம் நடப்பதாக ரஞ்சன் சொல்கிறான்.

முதல் இருபது நிமிடத்திற்குள் இவ்வளவும் நடந்து முடிந்து விடுகிறது. மறுநாள் காலையில் காணாமல் போன மூன்று பெண்களில் இருவர் தூக்கில் தொங்குகின்றனர். ரஞ்சன் விசாரிக்கும் முன் சக அதிகாரிகள் அவர்கள் தன் பால் உறவில் இருந்ததால் அவர்களின் தந்தைகளே கொன்று தொங்க விட்டு விட்டனர் என்று சொல்கின்றனர்.

ரஞ்சன் India of Lightல் இருந்து வந்தவன். கிராமிய இந்தியாவை புத்தகத்தின், செய்தி தாள்கள் வழி அறிந்தவன். ஆனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது கவுரவ கொலை செய்யப்பட்டார்கள் என்பதை நம்பும் அளவிற்கு முட்டாள் இல்லை. விசாரணையை தொடர சொல்கிறான். 

விசாரிக்க செல்லும் அதிகாரிகளின் வாகனம் தாக்க படுகிறது. தாழ்த்த பட்ட மக்களின் சார்பாக போராடும் Nishad அவர்களை துப்புரவு பணிகளை புறக்கணிக்கும் படி சொல்லிவிடுகிறான். Swach Bharat சாக்கடையில் மூழ்குகிறது. Police Officer அலுவலகத்துக்கு சாக்கடையின் மேல் செங்கற்கள் அடுக்கி அதன் மேல் நடந்து செல்கிறார்கள்.

இந்த காட்சிகள் எப்படி இந்தியா எழுத்தில் ஒன்றாகவும் இயல்பில் வேறாகவும் இருக்கின்றன என்று காட்டுகின்றன. காணாமல் போன மூன்றாவது பெண்ணையும் தேடுகின்றனர். இறந்து போன இரண்டு பெண்களின் post mortem அறிக்கையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்கள் என்று எழுதச் சொல்லி Inspector சொல்கிறார்.

ரஞ்சன் காதலியிடம் அந்த பெண்கள் 3 ரூபாய் கூலி உயர்த்தி கேட்டதற்காக தாக்க பட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறான். மாநகரங்களில் பிறந்து வளர்ந்து, வெளிநாடுகளில் கல்வி கற்ற ரஞ்சனுக்கு அவன் வேலைக்கு வந்த ஊரில் நடப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த நாடு சாதி, மதம் என்று எத்தனை பின் தங்கியிருக்கிறது என்று.

காதலி யாருக்காகவும் காத்திருக்காதே குற்றவாளிகளை கண்டு பிடி என்கிறாள்.

முரண் என்னவென்றால் ரஞ்சனின் வீட்டில் வேலைக்கு இருக்கும் பெண் பதின் பருவம் தாண்டாதவள். அவள் பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில் ஏன் வீட்டு வேலை செய்து கொண்டிருக்கிறாள் என்று ரஞ்சனோ அவனுடைய காதலியோ கேட்பதில்லை.

இதற்கு மேல் திரைக்கதையை அப்படியே எழுதாமல் மற்ற விஷயங்களை பற்றி பேசுவோம். இந்தப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் என்பது படத்தின் முன்னோட்டம் வெளியான போதே தெரிய வந்து விட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இது போல பல சம்பவங்களை நடத்திய, நடப்பதற்கு காரணமாக இருந்த கட்சி தான் இன்னமும் ஆட்சியில் இருக்கிறது. அவர்களை நேரடியாகவோ, படத்தின் மூலமோ தாக்குவது, விமர்சிப்பது தனக்கு தானே மண்ணை வாரி போட்டுக்கொள்வது என்று படமெடுபவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் இத்தனை வெளிப்படையாக பேசியதே ஆதரிக்க வேண்டிய, பின்பற்ற பட வேண்டிய முயற்சி.

படத்தின் கதா நாயகன் உயர் குடியை சேர்ந்தவனாக, நீதியுணர்ச்சி உள்ளவனாக இருக்கிறான்.  இடைநிலை சாதியை சேர்ந்தவர்கள் "இங்கேயே வாழ வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்வதில்லை" என்று இருக்கிறார்கள். தாழ்த்தபட்ட மக்கள் விதியை நொந்து கொள்வதை தவிர வேறு என்ன வழி?

Post Mortem செய்யும் பெண் மருத்துவர் Quotaவில் படித்து வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். அவரை உண்மையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என்று Inspector தடுக்கிறார். அவருடைய கோபத்தை facebookல் கவிதை எழுதி தீர்த்துக்கொள்ளுமாறு சொல்கிறார். வெளிய வந்து constableயிடம் இந்த டாக்டர் நாம் கட்டும் வரிப்பணத்தில் படித்தவள் என்கிறார்.

ஒரு வேளை அந்த Doctor இடத்தில் ரஞ்சனும், ரஞ்சன் இடத்தில் அந்த Doctorம் இருந்திருந்தால் இது மிக சவாலான ஒரு படமாக இருந்திருக்கும். ஆனால் வணிக வெற்றி கிட்டுமா? சர்ச்சை செய்து ஓட விடாமல் செய்யவே வாய்ப்பு அதிகம்.

படம் துவங்கிய போது இருந்த அந்த உத்வேகம் 30வது நிமிடத்தில் வடிய ஆரம்பித்து விடுகிறது. கண்டது, கேட்டது என்று அனைத்தையும் ஒரே படத்தில் சொல்ல விரும்பியதின் விளைவு. Social Media hype கொடுத்த அளவிற்கு படம் இல்லை. நிச்சயம் பரியேறும் பெருமாள் இதை விட better cinema தான். ஆனால் Article15 ற்கு கிடைக்கும் கவனம் அந்த படத்திற்கு கிடைக்காது.

படத்தை Murder Mystery (Seven, Memories of Murder, ராட்சசன்) போன்ற படங்கள்அல்லது Police Procedural (Zodiac, தீரன் அதிகாரம் ஒன்று, 8 தோட்டாக்கள்) என்று  வகைப்படுத்தாமல், காட்சி ஒருங்கிணைவு இல்லாமல் செய்து விட்டனர். Ayushman இதை விட மற்ற அனைத்து படங்களிலும் சிறப்பாக நடித்திருந்தார். இதில் அவருக்கு பெரிய வேலை இல்லை என்றே படுகிறது.

நாசர் ஒரு கேலி சித்திரம் போல வந்து செல்கிறார். இவரை போன்று எத்தனை உயர் அதிகாரி பாத்திரங்களை எத்தனை படங்களில் பார்த்திருப்போம்? Inspector Brahmadatt மற்றும் அவருக்கு கீழ் வேலை பார்க்கும் SI ஆக நடித்திருக்கும் நடிகர்கள் இருவரும் மிக சிறப்பான பங்களிப்பை செய்திருக்கின்றனர். படத்தின் Outstanding Performance  அவர்கள் இருவருடையதே.

படத்தில் காவல் துறையினர் அனைவரும் தாங்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பதை கட்சியின் சின்னத்தை சொல்லி கேலி செய்து பேசிக்கொள்கிறார்கள். Cycle, கை, யானை, மலர் என்று உள்ளூர், தேசிய கட்சிகளை பகடி செய்கின்றனர். பகடி தானே எளியவர்களால் முடிந்தது?!

படத்தின் பின் பகுதியில் உறியடி இரண்டு பாகங்களில் இடம்பெற்ற மக்களை பிரிக்க உள்ளூர் அரசியல்வாதி செய்யும் சதிகளை போன்ற காட்சிகள் நிறைந்து கிடக்கின்றன. அவை எதுவும் புதுமையாக இல்லை.

Marshland என்கிற Spain நாட்டு திரைப்படம் காணாமல் போன பெண்களை பற்றி விசாரிக்க வரும் இரண்டு அதிகாரிகள், அவர்கள் கண்டு பிடிக்கும் உண்மைகள் என்று ஒரு Police Procedural come thriller படம். அந்த படம் நடக்கும் காலகட்டத்தில் நிலவிய அரசியல், சமூக, பொருளாதார சூழ்நிலையை பின்புலமாக கொண்டு ஒரு கதையை வலுவாக சொல்கிறது. அந்த வலு Article 15ல் இல்லை.